மழை: மலேசிய காய்கறிகள் விலை ஏற்றம்

மழை: மலேசிய காய்கறிகள் விலை ஏற்றம்

2 mins read
6588f217-e3f3-49c8-9b97-8f01d40ec898
வெள்ளரிக்காய், பாகற்காய் விலைகள் 15% வரை உயர்ந்துவிட்டன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலே­சி­யா­வில் பெய்த பரு­வ­மழை கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் காய்­கறி விலை­கள் உயர்ந்­து­விட்­டன. குறிப்­பாக சில காய்­க­றி­க­ளின் விலை இரு­ம­டங்­கா­கி­விட்­டது. விலை ஏற்­றத்­தைத் தாங்­கள் எதிர்­பார்க்­க­வில்லை என்று உள்­ளூர் காய்­கறி வியா­பா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

வெள்­ள­ரிக்­காய் மற்­றும் பாகற்­காய் போன்­ற­வற்­றின் விலை 5 விழுக்­காடு முதல் 15 விழுக்­காடு வரை ஏறி­விட்­ட­தாக ஃபேர் பி­ரைஸ் பேரங்­கா­டி­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார். அதே­நே­ரம் மலே­சி­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் இதர காய்­க­றி­

க­ளின் விலை­யில் பெரி­தாக மாற்­ற­மில்லை என்­றார் அவர்.

சூழ்­நி­லையை ஃபேர்பி­ரைஸ் அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கும் என்று கூறிய அவர், அக்­டோ­ப­ரில் விலை ஏற்­றத்தை பேரங்­கா­டி­கள் ஏற்­றுக்­கொண்­ட­தா­க­வும் இம்­மா­தத் தொடக்­கத்­தி­லி­ருந்து விலை­கள் மாற்றி அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

"மலே­சி­யா­வில் இருந்து பெரும்­பா­லான காய்­க­றி­கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டா­லும் தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா மற்­றும் சீனா­வி­லி­ருந்­தும் காய்­க­றி­க­ளைத் தரு­விக்­கி­றோம். உள்­ளூர் தோட்­டங்­களில் இருந்­தும் சில காய்­க­றி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன," என்று அந்­தப் பேச்­சா­ளர் கூறி­னார்.

அண்­மைய பரு­வ­நிலை கார­ண­மாக பல்­வேறு பொருள்­களின் விலை ஏறி­விட்­ட­தைக் காண­மு­டிந்­த­தாக கோல்டு ஸ்டோ­ரேஜ், ஜையன்ட் போன்ற பேரங்­கா­டி­களை நடத்­தும் டிஎ­ஃப்ஐ சில்­லறை வர்த்­தகக் குழு­மம் கூறி­யுள்­ளது. சிங்­கப்­பூ­ருக்கு ஆகப்­பெ­ரிய அள­வில் காய்­க­றி­களை விநி­யோ­கம் செய்­வது மலே­சி­யா­தான். கடந்த ஆண்டு கிட்­டத்­தட்ட 582,000 டன் காய்­க­றி­க­ளைச் சிங்­கப்­பூர் இறக்­கு­மதி செய்­தது. அதில் மலே­சி­யா­வின் பங்கு 42%.

மலே­சி­யா­வில் கடந்த செப்­டம்­பர் 24ஆம் தேதி­யில் இருந்து இடி, மின்­ன­லு­டன் கூடிய கன­ம­ழை பெய்து வரு­வ­தா­க­வும் நவம்­பர் இறுதி வரை இதே நிலை தொட­ரக்­கூ­டும் என்­றும் அந்­நாட்­டின் வானிலை ஆய்வு நிலை­யம் தெரிவித்தது. இந்­தத் தொடர் மழை கார­ண­மாக கிளந்­தான், திரங்­கானு மற்­றும் பெர்­லிஸ் போன்ற மாநி­லங்­களில் வெள்­ளம் ஏற்­படும் நிலை இருப்­ப­தா­க­வும் அது கூறியது.