இங்குள்ள மேலும் இரண்டு உணவங்காடி நிலையங்களும் பத்து காப்பி கடைகளும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, அதிகபட்சம் ஐந்து பேர் உள்ள குழுக்கள் அமர்ந்து உண்ண அனுமதித்துள்ளன.
தெம்பனிஸ் ரவுண்ட் ஈரச்சந்தை மற்றும் உணவங்காடி நிலையம், தாமான் ஜூரோங் ஈரச்சந்தை மற்றும் உணவங்காடி நிலையம் ஆகியவை அந்த இரண்டு உணவங்காடி நிலையங்கள்.
லோவர் டெல்டா ரோட்டில் உள்ள சுவான் கீ காப்பி கடை, தாகூர் லேனில் உள்ள ஹங்கர்ஹவுஸ் காப்பிக் கடை உள்ளிட்டவை ஐவர் கொண்ட குழுக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன.
வரும் திங்கள் 29ஆம் தேதிக்குள் மேலும் 19 உணவங்காடி நிலையங்கள் அதிகபட்சம் ஐந்து பேர் கொண்ட குழுக்கள் ஒன்றாக அமர்ந்து உண்ண அனுமதிக்கும்.
இதன்வழி அதற்கு அனுமதித்துள்ள உணவங்காடி நிலையங்களின் எண்ணிக்கை 32ஆக உயரும்.
வரும் செவ்வாய்க்கிழமை 30ஆம் தேதிக்குள் எஞ்சியுள்ள உணவங்காடி நிலையங்களில் ஐந்து பேர் வரை உள்ள குழுக்கள் அமர்ந்து உண்பதற்கான நுழைவுச் சோதனைகள் நடப்பில் இருக்கும்.
தேசிய சுற்றுப்புற ஆணையத்தின் இணையத்தளம் இதைத் தெரிவித்தது.