சிங்கப்பூர் இந்திய பல்லிசைக் குழு படைக்கும் 'ஆத்மஞானம்'

சிங்கப்பூர் இந்திய பல்லிசைக் குழு படைக்கும் 'ஆத்மஞானம்'

1 mins read
c3a51679-d846-41f3-9611-6deeb30b5b09
-

கடந்த 36 ஆண்­டு­க­ளாக இயங்­கி­வ­ரும் சிங்­கப்­பூர் இந்­தி­யப் பல்­லி­சைக் குழு (படம்), நாளை 28ஆம் தேதி எஸ்­பி­ள­னேட் கலை­ய­ரங்­கத்­தில் ஆத்­ன­ஞா­னம் எனும் இசை­ நி­கழ்ச்­சி­யைப் படைக்­க­வி­ருக்­கிறது.

எஸ்­பி­ள­னேட் ஆண்­டு­தோ­றும் ஏற்­பாடு செய்­யும் கலா உற்ச­வம் நிகழ்ச்­சி­யின் 20வது ஆண்டு நிறை­வைக் குறிக்க இந்­நி­கழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பிற்­ப­கல் 3 மணி, இரவு ஏழு மணி என இரண்டு காட்­சி­க­ளாக நடை­பெ­றும் இந்நிகழ்ச்­சி­யில் 32 இசைக்­க­லை­ஞர்­களும் பாட­கர்­களும் பங்­கேற்­க­வுள்­ள­னர். திரு­மதி லலிதா வைத்­தி­ய­நா­தன் பல்­லி­சைக் குழுவை வழி­ந­டத்­து­வார்.

எஸ்பிளனேட் இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.