கடந்த 36 ஆண்டுகளாக இயங்கிவரும் சிங்கப்பூர் இந்தியப் பல்லிசைக் குழு (படம்), நாளை 28ஆம் தேதி எஸ்பிளனேட் கலையரங்கத்தில் ஆத்னஞானம் எனும் இசை நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கிறது.
எஸ்பிளனேட் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலா உற்சவம் நிகழ்ச்சியின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்க இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணி, இரவு ஏழு மணி என இரண்டு காட்சிகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 32 இசைக்கலைஞர்களும் பாடகர்களும் பங்கேற்கவுள்ளனர். திருமதி லலிதா வைத்தியநாதன் பல்லிசைக் குழுவை வழிநடத்துவார்.
எஸ்பிளனேட் இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.