போதுமான விழிப்புணர்வு இல்லாததால் 'ஓபிசி' எனப்படும் பலன்களைக் கருத்தில்கொண்டு வரையப்படும் வேலை ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளத் தனியார் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் தயங்குவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அவை தொழில்நுட்ப அம்சங்களைக் கடைப்பிடிக்கத் தயங்குகின்றன.
இதைக் கையாள முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கேற்றவாறு எடுக்கப்படும் முயற்சிகள் போதுமான அளவு இல்லை எனக் கூறப்படுகிறது. வேலை, செயல்முறைகளை மறுசீரமைப்பது புத்தாக்கத் தீர்வுகளை வழங்குவது போன்றவற்றுக்கு 'ஓபிசி' உதவக்கூடும் எனக் கருதப்படுகிறது.