மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு

மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு

1 mins read
a6a237c0-d3c4-4749-94ce-1fc9b28b3f6c
-

தனக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்ட­னைக்கு எதி­ரான மேல்­மு­றை­யீட்டு வழக்­கில் 34 வயது மலே­சி­ய­ரான பன்­னீர் செல்­வம் பரந்­தா­மன் தோல்­வி­ய­டைந்­துள்­ளார். சட்­ட­விரோ­த­மாக போதைப்­பொ­ரு­ளைக் கொண்­டு­வந்த அவ­ருக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்­டனை ஈராண்டு­க­ளுக்கு முன் நிறுத்­தப்­பட்டி­ருந்­தது. மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் அவ­ரின் வழக்கை நிரா­க­ரித்த பிறகு பன்­னீர் தனது வழக்­க­றி­ஞர்­க­ளான திரு டூ சிங் ஜி, திரு லீ ஜி என் ஆகி­யோ­ரி­டம் கண்­ணா­டித் திரை­வழி பேசி­னார். அதன் பின்­னர் மூவ­ரும் அமை­தி­யா­கப் பிரார்த்­தனை­யில் ஈடு­பட்­ட­னர்.

போதைப்­பொ­ருள் கடத்­தல் நட­வடிக்­கை­களை முறி­ய­டிக்க உத­வும் வகை­யில் மத்­தி­யப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு பன்­னீர் அளித்த தக­வல்­கள் இருந்­தனவா என்­பது கருத்­தில்­ கொள்­ளப்­பட்டு மேல்­முறை­யீட்டு நீதி­மன்­றம் முடி­வெ­டுத்­தது. 51.84 கிராம் எடை­கொண்ட ஹெரொ­யின் போதைப்­பொ­ருளை சிங்­கப்­பூ­ருக்­குள் கொண்­டு­வந்­த­தாக பன்­னீர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டு 2017ஆம் ஆண்டு நிரூ­பிக்­கப்­பட்­டது. அதற்­குப் பிறகு அவ­ருக்­குக் கட்­டாய மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.