சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு நிலையம், காட்சியகம், சிங்கப்பூர் எக்ஸ்போ ஆகியவை இருக்கும் பகுதிகளில் சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படுவதால் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தைச் சேர்ந்த ஏழு பேருந்துச் சேவைகள் இவ்வார இறுதியில் பாதிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 70எம், 111, 133, 162எம், 502 ஆகிய சேவைகள் இன்று காலை ஒரு மணியிலிருந்து ஆறு மணி வரையிலும் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரையிலும் சன்டெக் சிட்டிக்கு முன்னால் இருக்கும் தெமாசெக் புலவார்ட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்கமாட்டா. நாளை காலை நான்கு மணி முதல் மாலை நான்கு மணி வரைக்கும் இந்த மாற்றங்கள் பொருந்தும்.
பேருந்துச் சேவைகள் 24, 38 ஆகியவை எக்ஸ்போவிற்கு அருகே உள்ள அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நாளை காலை எட்டு மணி முதல் பின்னிரவு ஒரு மணிவரை நிற்கமாட்டா.