முரசொலி
சிங்கப்பூர் பல சமய, பல இனச் சமூகம். வெற்றிகரமான சமூகம், நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இங்குள்ள எல்லா இனத்தவரும் தங்கள் தங்கள் சிறப்பு இயல்புகளை, வழமைகளை சுதந்திரமாகக் கடைப்பிடித்து, கட்டிக்காத்துவருகிறார்கள்.
அதேவேளையில், தேசிய நலன் என்று வரும்போது சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் எவராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சிங்கப்பூரர்கள்- என்ற ஒரே பொது அடைளத்துடன் ஒற்றுமைக நாட்டுக்கும் தங்களுக்கும் தோள்கொடுக்கிறார்கள். இதுவே சிங்கப்பூரின் சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் மூலாதாரமாக இருந்து வந்துள்ளது.
இன ஒற்றுமை, நல்லிணக்கம் இல்லை எனில் வெற்றிகரமான சிங்கப்பூர் இல்லை என்பதை சிங்கப்பூர் சமூகம் நன்கு புரிந்துகொண்டுள்ளது.
இன, கலாசார, சமய உணர்வுகளைவிட தேசிய ஒட்டுமொத்த நலன்கள் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் சிங்கப்பூரர்கள். சமூக நல்லிணக்கத்தைக் கிள்ளுக்கீரைக ரும் கருதிவிடக் கூடாது என்பதை சிங்கப்பூரர்கள் எப்போதுமே தங்கள் மனதில் நிறுத்தி செயல்படுகிறார்கள்.
இத்தகைய நிலை அதுவாக ஒரேநாளில் ஏற்பட்ட ஒன்றல்ல. இந்தப் புரிந்துணர்வு ஏற்பட்டு நிலைத்து இருக்க சிங்கப்பூர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இதை உறுதிப்படுத்த சட்டதிட்டங்களும் உறுதுணைக இருந்து வந்துள்ளன, வருகின்றன.
பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகங்கள் வாழ்கின்ற சிங்கப்பூரில் எல்லாரையும் தனித்த ஒரே அடைளத்தின் கீழ் பலவந்தமாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்படவில்லை.
அப்படிச் செய்தால் எதிர் விளைவுகள் இருக்கும் என்பது தவிர்க்க இயலாதது. அத்தகைய அணுகுமுறைக்குப் பதிலாக, இங்குள்ள வெவ்வேறான குழுக்களின் பொதுவான, பொது நலனுக்கான விருப்பங்களையும் கருத்துகளையும் பொதுப்படுத்தி, அதைப் பலப்படுத்தி அதன்மூலமே சிங்கப்பூரின் வெற்றி சாதிக்கப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும்கூட சிரமப்பட்டு, ஒன்று சேர்ந்தவை எளிதில் பிரிந்துவிடக்கூடிய நிலை எங்கேயும் உண்டு. இதுவே உண்மை நிலவரம் என்பதை மறந்துவிடக்கூடாது.
குறிப்பாக இன்றைய உலகில் புதிதாக ஒரு கலாசார மிரட்டல் தலை எடுக்கும் சூழலில் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. நாடுகள் பின்னிப்பிணைந்து செயல்படவேண்டிய தேவை உருவாகி இருக்கிறது. உலகமயம் உருவாகிவிட்டது. இச்சூழலில் மேற்கத்திய நாடுகளில் புதிய கலாசாரப் போர் தலைதூக்குகிறது. சமூகத்தைவிட தங்கள் நலனை சிலர் பெரிதாக நினைக்கிறார்கள்.
அதற்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வெவ்வேறான சமூகக் குழுக்கள் பாலினத்தன்மை, இனம் போன்ற கலாசாரப் பிரச்சினைகள் தொடர்பில் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கைளுகின்றன. அத்தகைய செயல்கள் அரசியலில் எதிரொலிக்கின்றன.
இதுபோன்ற புதிய மிரட்டலின் விளைவாக, அதன் ஆதிக்கத்தின் தாக்கமாக, சிங்கப்பூரில் புதிய வகை திடீர் அடைள அரசியல் இடம்பெற்று, அது வழக்கமான நன்கு தெரிந்த வெவ்வேறான இன, சமய வரம்புகளுக்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், அண்மையில் எஸ் ராஜரத்னம் அனைத்துலக கொள்கை ஆய்வுக் கழகத்தில் ஆற்றிய உரையில் இதைத்தான் முக்கியமாக குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் மிகவும் கவனமாக இருந்துகொண்டு விவேகமாகச் செயல்படவில்லை என்றால் அத்தகைய புதிய 'குலவழிப் பிரிவினர்' உணர்வு சிங்கப்பூரில் மிகவும் எளிதாக வேர் ஊன்றிவிடும் ஆபத்து இருக்கிறது.
இதைத் தடுக்கவில்லை என்றால் அரசியலிலும் சமூகங்களிலும் பிளவு நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடிது. அப்படிப்பட்ட ஒரு நிலையில், அதனால் ஏற்படக்கூடிய புதிய அடைளப் பிரச்சினைகள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அமைச்சர் மக்களுக்கு நினைவுப்படுத்தி சிங்கப்பூரர்களை எச்சரித்து இருக்கிறார்.
சமூகத்தில் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் இடம் உண்டு என்பதையும் அமைச்சர் திட்டவட்டமாக வலியுறுத்தி இருக்கிறார்.
வேறுபட்ட குலவழியினர் அரை நூற்றாண்டுக்கும் அதிக காலமாக அமைதியுடன், நல்லிணக்கத்துடன், ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நாடு சிங்கப்பூர். இந்த நல்லிணக்கம் எப்போதுமே கத்திமுனை போன்றது. தொடர்ந்து இதில் கவனம் செலுத்தி வரவேண்டும். இதை முக்கியமாக நிலைநாட்டி வரவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், குலவழி மிரட்டலையும் அடைள அரசியலையும் சமாளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
போட்டி, பிணக்கத்தைவிட ஒத்துழைப்பே முன்னேறுவதற்கான தலைசிறந்த வழி என்பதை நம்முடைய முன்னோடிகள் புரிந்துகொண்டு இருந்தார்கள். இதுவே சிங்கப்பூரின் பொருளியலுக்கு மட்டுமின்றி முழு சமூகத்திற்கும் அடிப்படைக இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு பிரிவினரின் உண்மைன அக்கறைகளுக்குச் செவிமடுத்து அவற்றுக்குத் தீர்வுகாணும் முறையே தலைசிறந்ததாக இருக்கும்.
அதேநேரத்தில் தனி அடைளம் அல்லது குலவழி உணர்வு அடைளத்தை அரசியலில் மிதமிஞ்சி சார்ந்து இருப்பதையும் நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் அமைச்சர் விளக்கினார்.
உலகில் புதிதாக தலைதூக்கும் குலவழி உணர்வு நிலவரம் சிங்கப்பூருக்கு மிரட்டலாக ஆவதைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.
உண்மை நிலவரத்தையும் அதனால் ஏற்படக்கூடிய மிரட்டல்களையும் நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த மிரட்டலைச் சமாளிக்க செம்மைன சட்டத்திட்டங்களை அரசாங்கம் கொண்டிருந்தாலும் அவை எல்லாம் இதில் கடைசி முயற்சிகத்தான் இருக்க முடியும்.
அரசாங்கமும் சமூகமும் சேர்ந்துதான் இத்தகைய நிலையைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
சமூகமும் குடிமை அமைப்புகளும் சமூகத் தலைவர்களும் மக்களிடையே தொடர்புகளைப் பலப்படுத்த தொடர்ந்து பாடுபட வேண்டும். சமூக ஊடகங்களில் தங்கள் நலன்களையே பெரிதாக ஊதிவிடுவோர், எதிர் விளைவுகள் இருக்கும் என்பதை எப்போதுமே கவனத்தில்கொள்ள வேண்டும்.
பன்மயம் என்பது தவிர்க்க இயலாது என்பதை மேலும் மேலும் அதிகமாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஐக்கியமும் நல்லிணக்கமும் தொடர்ந்து வலுவாக வேண்டும்.