1,090 பேருக்குத் தொற்று; மரணமும் 3 ஆகக் குறைவு

1,090 பேருக்குத் தொற்று; மரணமும் 3 ஆகக் குறைவு

1 mins read
0512c89c-ba74-41b4-96db-5c5f4b97720a
-

சிங்­கப்­பூ­ரில் வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 1,090 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. அவர்­க­ளை­யும் சேர்த்து கொரோனா கிருமி தொற்­றி­யோரின் மொத்த எண்­ணிக்கை 259,875. ஆகி­யது.

வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் வெள்­ளிக்­கி­ழமை 0.74 ஆக இருந்­தது. இந்த அதி­க­ரிப்பு விகி­தம் தொடர்ந்து 14 நாட்­க­ளாக 1க்கும் குறை­வா­கவே இருந்து வரு­கிறது. புதிய வாராந்­திர தொற்று எண்­ணிக்கை குறைந்து வரு­வதை இது காட்­டு­கிறது.

கொரோனா கார­ண­மாக மூவர் மர­ண­ம­டைந்­த­னர். அவர்­க­ளுக்கு வயது 69 முதல் 83 வரை. மாண்டவர்­கள் அனை­வ­ருக்­கும் பல்­வேறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் இருந்­தன. கொவிட்-19 மொத்த மரண எண்­ணிக்கை 684 ஆகி உள்­ளது.

புதி­தாகக் கிருமி தொற்­றி­யோரில் 1,064 பேர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­களில் 185 பேருக்கு வயது 60 மற்­றும் அதற்­கும் அதி­கம். வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் 22 பேர். நால்­வர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்று அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த இரண்­டு­வார கால­மாக தீவிர சிகிச்­சைப் பிரிவு பய­னீட்டு அளவு குறைந்து வரு­கிறது. ெவள்ளிக்­கி­ழமை இந்த அளவு 54.2% ஆக இருந்­தது.