தடுப்பூசி கர்ப்பிணியோடு குழந்தையையும் காக்கும்

1 mins read
497462a4-865a-491d-a64c-fbeade91eb22
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி­யைப் போட்­டுக்­கொள்­ளாத கர்ப்­பி­ணி­க­ளுக்­குத் தொற்று ஏற்­பட்­டால் கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து உண்டு.

அதோடு மட்­டு­மின்றி சில கர்ப்­பி­ணி­க­ளைப் பொறுத்­த­வரை, அவ­ரு­டைய குழந்­தைக்­கும் கொவிட்-19 கிருமி தொற்­றக்­கூ­டிய வாய்ப்­பும் உண்டு என்று வல்­லு­நர்­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

என்­றா­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட கர்ப்­பி­ணி­க­ளுக்கு கொரோனா தொற்று ஏற்­படும் வாய்ப்பு குறைவு.

அதோடு, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தன் மூலம் அவ­ரு­டைய குழந்­தை­யின் உடலில் நோய் எதிர்ப்­பாற்­றல் ஏற்­ப­டக்­கூடும் என்று வல்லுநர்கள் விளக்கி உள்­ள­னர்.

மருத்­துவ வல்­லு­நர்­கள் நேற்று நடந்த இணை­யக் கருத்­த­ரங்­கில் இந்­தத் தக­வல்­க­ளைத் தெரி­வித்­த­னர். கர்ப்­பி­ணிப் பெண்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் ஆபத்து ஏதா­வது ஏற்­ப­டுமோ என்று நிலவும் அச்­சத்­தைப் போக்­கும் வகை­யில், நேற்­றைய கருத்­த­ரங்கு நடந்­தது.

தாயின் உட­லில் இருந்து தொப்­புள்கொடி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குழந்­தைக்­குப் பர­வும் வாய்ப்பு உண்டு என்று பல வெளி­நாட்டு ஆய்­வு­களும் தெரி­வித்­துள்ளதை வல்­லு­நர்­கள் நேற்­றைய கருத்­த­ரங்­கில் சுட்­டிக்­காட்­டி­னர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் தாய்ப்­பால் மூலம் குழந்­தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்­படும். அது கிருமி பர­வா­மல் தடுக்­கும் ஆற்­றலை குழந்­தைக்கு கொடுக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு கொவிட்-19 தொற்­றி­னால் குறை­பி­ர­ச­வம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு­கள் இரண்டு முதல் மூன்று மடங்கு அதி­கம் என்­றும் வல்­லு­நர்­கள் தெரி­வித்­த­னர்.