பதின்ம வயது சிறாரைத் தாக்கிய இளையர்களுக்குத் தண்டனை

1 mins read
7b211655-348d-4fc6-befb-98f52d564721
-

இளையருக்கான பராமரிப்பு இல்லத்தில் பதினான்கு வயது சிறுவனை இரட்டை சகோதரர்கள் அடித்து உதைத்ததை அடுத்து அந்தச் சிறார்களுக்கு கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இளையர்களுக்கான பராமரிப்பு இல்லத்தைப் பற்றியும் தாக்கப்பட்ட சிறுவன் பற்றியும் மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்தச் சிறுவன் ஆணவத்துடன் இருந்தால் அவைத் தாக்கியதாக அந்த இருவர் தெரிவித்தனர். இரட்டைச் சகோதரரில் ஒருவருக்கு இன்று 15 மாத கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டது. 10 மணி முதல் 6 மணி வரை வீட்டில் கட்டாயம் இருக்கும்படி உத்தரவிடப்பட்ட அந்த இளையர், 40 மணி நேர சமூக சேவையையும் செய்யவேண்டும்.

நவம்பர் 8ஆம் தேதியன்று இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஒப்புக்கொண்ட இரண்டாவது சகோதரருக்கு டிசம்பவர் 6ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும்.