சுமுகமாகத் தொடங்கிய தரைவழி விடிஎல் பயணத் திட்டம்: உறங்காமல் காத்திருந்து உற்சாகத்துடன் புறப்பட்ட பயணிகள்

சுமுகமாகத் தொடங்கிய தரைவழி விடிஎல் பயணத் திட்டம்: உறங்காமல் காத்திருந்து உற்சாகத்துடன் புறப்பட்ட பயணிகள்

3 mins read
371b079d-e2fa-4334-9834-b522ee2bfa89
-

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான தனிமை உத்­த­ர­வில்லா தரைப் பய­ணம் (விடி­எல்) நேற்று சுமு­க­மா­கத் தொடங்­கி­யது.

முதல் நாளான நேற்று ஏறத்­தாழ சிங்­கப்­பூ­ரில் இருந்து 1,440 பேர் மலே­சியா செல்­வார்­கள் என்று முன்­ன­தாக எதிர்­பார்க்­கப்­பட்­டது.

அந்த விடி­எல் பயண ஏற்­பாட்­டின் முதல்­கட்­டத்­தின்­படி குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால அனு­ம­தி­தா­ரர்­கள் மட்­டுமே பய­ணம் மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

என்­றா­லும் மலே­சிய நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருக்­க­வில்லை என்­ப­தால் நேற்று ஒரு­வர் திருப்பி அனுப்­பப்­பட்­டார்.

பய­ணத்­திற்கு முன்­ப­திவு செய்­தி­ருந்த இதர இரண்டு பய­ணி­கள் வர­வில்லை. இவற்­றைத் தவிர மற்­ற­படி எந்த பிரச்­சி­னை­யும் இல்­லா­மல் நேற்று முதல்­நாள் பய­ணம் இடம்­பெற்­ற­தா­கத் தெரி­ய­வந்­தது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக சிங்­கப்­பூர்-மலே­சிய தரை எல்லை சென்ற ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மூடப்­பட்­டது.

அத­னால் மலே­சி­யா­வில் உள்ள தங்­கள் உற­வி­னர்­க­ளை­யும் நண்­பர்­க­ளை­யும் பார்க்க முடி­யா­மல் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் சிங்­கப்­பூ­ரில் முடங்கிவிட்டனர்.

தங்­க­ளு­டைய நெடு­நாள் ஆசையை நிறை­வேற்­றிக்­கொள்ள நேற்று வாய்ப்பு கிடைத்­ததை மகிழ்ச்சி, பர­ப­ரப்பு, உற்­சா­கத்­து­டன் அவர்­கள் மிகவும் விருப்பத்துடன் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர்.

இந்­தத் திட்­டத்­தின்­கீழ் நேற்று மலே­சியா புறப்­பட்ட பய­ணி­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி டான் ஹுய் யாங் என்ற ஆசி­ரியை, இன்று ஜோகூர் பாரு­வில் தன் குடும்­பத்­தா­ரு­டன் தனது 33வது பிறந்­த­நாளைக் கொண்­டா­டு­கி­றார்.

"இரவு முழு­வ­தும் நான் தூங்­க­வில்லை. பர­ப­ரப்பு அடங்­க­வில்லை. எப்­போது பொழுது விடி­யும் என்று காத்து கிடந்­தேன்.

அதி­காலை 4 மணிக்கு எழுந்து வீட்டைவிட்டு புறப்­பட்டு உட்­லண்ட்ஸ் தற்­கா­லிக பேருந்து முனை­யத்­தில் 6.50 மணிக்­கெல்­லாம் வரி­சை­யில் நிற்­கத் தொடங்­கி­விட்­டேன்," என்று அவர் கூறி­னார்.

இவ­ரைப் போலவே பல­ரும் நேற்று உற்­சா­கத்­து­டன் முன்­ன­தாகவே பேருந்து முனை­யத்­திற்­குச் சென்று மலே­சியா புறப்­பட்­ட­னர்.

இந்த ஏற்­பாட்­டின்­கீழ் பய­ணம் செய்ய பல­ரும் படா­த­பாடு­பட்டு முன்­ப­திவு செய்­த­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த விடி­எல் ஏற்­பாட்­டின்­கீழ் பேருந்­துச் சேவையை வழங்க இரண்டு நிறு­வ­னங்­கள் அனு­ம­திக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

'டிரான்ஸ்­டார் டிரா­வல்', 'ஹாண்­டல் இண்டா' என்ற அந்த இரண்டு நிறு­வ­னங்­களும் அன்­றா­டம் 64 விடி­எல் சேவை­யை நடத்­தும். ஒரு பேருந்­தில் 45 பேருக்கு இட­முண்டு.

ஜோகூர் பாரு­வில் இருந்து வேறு பேருந்­து­களைப் பிடித்து மலே­சி­யா­வின் இதர மாநி­லங்­க­ளுக்­குச் செல்­வோ­ரும் நேற்று சிங்­கப்­பூ­ரில் இருந்து புறப்­பட்­ட­னர்.

ஜோகூ­ரில் தரை­யி­றங்­கி­ய­தும் பய­ணி­கள் தற்­கா­லிக நிலை­யம் ஒன்­றில் ஏர்­ஆர்டி பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

தொற்று இருப்­ப­தாகத் தெரி­ய­வந்­தால் அவர்­கள் கட்­டா­ய­மாக பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

அதில் தொற்று உறு­தி­யா­னால் 10 நாள் தனி­மை­யில் வைக்­கப்­படு­வார்­கள். அப்படி வைக்கப்படுவோர் வீட்­டில் இருந்து குண­ம­டை­ய­வேண்டி இருக்­கும்.

பதாகை வரவேற்பு

விடி­எல் பயண ஏற்­பாட்­டின்­கீழ், சிங்­கப்­பூ­ரில் இருந்து பேருந்­து­களில் புறப்­பட்ட பய­ணி­கள் நேற்­றுக் காலை ஜோகூர் பாரு­வில் மிக உற்­சா­க­மாக தரை­யி­றங்­கி­னர்.

முத­லா­வது பேருந்து காலை 9.15 மணிக்கு ஜோகூர் பாரு லர்கின் முனை­யத்­திற்­குச் சென்­றது. தாய­கத்­திற்குத் திரும்­பு­வோரே வருக என்று கூறிய பதா­கை­ அவர்­களை வர­வேற்­றது.

இத­னி­டையே, விடி­எல் பேருந்­தில் நேற்று ஜோகூர் பாரு சென்­ற­வர்­களில் ஒரு­வ­ரான திரு கவின் ராஜ் குணா­ளன், 24, என்­ப­வர், விடி­எல் நடை­முறை சர­ள­மாக இருந்­தது என்­றார்.

திரு குணா­ளன் ஆறு மாத­மாக மலே­சியா செல்­ல­வில்லை. அங்கு அவர் மூன்று மாதம் தங்­கி இருந்து­விட்டு பிறகு சிங்­கப்­பூர் திரும்­பு­வார்.