யோகா வகுப்பின்போது பெண்களை வளைத்துப் பிடித்து மானபங்கப்படுத்திய குற்றச்சாட்டை யோகா பயிற்றுவிப்பாளர் ஒருவர் எதிர்நோக்குகிறார்.
அவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று போலிசார் வெளியிட்ட அறிக்கையில் பத்து மானபங்கக் குற்றச்சாட்டுகளை பயிற்றுவிப் பாளர் எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டது.
யோகா பயிற்றுவிக்கும்போது குறைந்தது ஐந்து பெண்களை அவர் மானபங்கப்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் 24 முதல் 38 வயது வரையிலானவர்கள். கடந்த ஆண்டு ஜூலையில் யோகா ஸ்டுடியோவில் நடந்த யோகா வகுப்பில் தன்னை இரண்டு முறை அவர் மானபங்கப்படுத்தியதாக முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்ததை நியூபேப்பர் நாளிதழ் 2020ல் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தை சமூக ஊட கங்களில் பகிர்ந்துகொண்ட மாணவி பின்னர் போலிசாரிடம் அவர் மீது புகார் அளித்தார்.
அந்தச் சமயத்தில் யோகா ஸ்டுடியோவுக்கு இரண்டு கிளைகள் இருந்தன. சம்பவத்துக்குப் பிறகு பயிற்றுவிப்பாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டதாக தெரி கிறது. பயிற்றுவிப்பாளர் பற்றி அந்த மாணவி அங்கிருந்த ஊழியர் ஒருவரிடமும் புகார் செய்தார்.
மாணவர்களை அவர் தகாத முறையில் தொடுவது இது முதல் முறையல்ல என்று ஊழியர் கூறிய தால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
மறுநாள் காலை தந்தையுடன் வந்து யோகா ஸ்டுடியோ உரிமையாளர்களைச் சந்தித்து மாணவி மீண்டும் புகார் கூறினார். அப்போது பயிற்றுவிப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உரிமையாளர்கள் உறுதியளித்தனர். ஆனால் அந்தப் பயிற்றுவிப்பாளர் தொடர்ந்து வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தார்.

