இரண்டு குடியிருப்புப் பகுதிகளில் தீ மூட்டியதாக நம்பப்படும் 48 வயது ஆடவரை நேற்று போலிசார் கைது செய்தனர். ஞாயிறு இரவு சிராங்கூன் அருகே பெண்டமிர் ரோட்டில் தீ மூண்டுள்ளதாக போலிசாருக்குத் தகவல் வந்தது. குடியிருப்பாளர்களின் உதவி யுடன் தீயை அணைத்த போலிசார், கண்காணிப்புக் கேமராவை ஆராய்ந்து, நள்ளிரவுக்குப் பிறகு அந்த ஆடவரை கைது செய்தனர்.
திங்கட்கிழமை மெக்நேர் ரோட்டிலும் அவர் தீ மூட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இன்று அவர் மீது குற்றம்சாட்டப்படவிருக்கிறது.

