நீண்டநாளுக்குப் பின் நேரில் வந்து தழுவிய நிம்மதி

நீண்டநாளுக்குப் பின் நேரில் வந்து தழுவிய நிம்மதி

3 mins read
d49a58dd-3aed-42c9-a7b1-8209bb80c9f4
சென்னையிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் வந்திறங்கிய பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். படம்: திமத்தி டேவிட் -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

நான்கு மாதக் குழந்­தையை விட்­டு­ விட்டு சிங்­கப்­பூ­ருக்கு வந்த அருள்­மணி, இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் தனது இரண்டு பிள்­ளை­

க­ளை­யும் கட்­டிப்பிடித்து அர­

வ­ணைக்­கக் காலை ஐந்து மணிக்கே சாங்கி விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தார்.

தமது மனைவி, இரு மகள்­களும் நேற்றுக் காலை சாங்கி விமான நிலை­யத்­தின் முனை­யம் மூன்­றில் வந்­தி­றங்­கிய சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்ஐஏ) விமா­னத்­தில் சென்­னை­யி­லி­ருந்து வந்­த­னர்.

இவரைப்போலவே சிங்­கப்­பூ­ர­ரான 42 வயது சாந்­தினி செல்­வ மும் பாசம் பொங்கக் காத்திருந் தார். தமது அம்­மா­வும் அப்­பா­வும் பெட்­டி­க­ளைத் தள்ளுவண்­டி­யில் வைத்­துக்­கொண்டு பொது வரு­கை ­யா­ளர் வர­வேற்பு இடத்­தில் வெளி­யே­றி­ய­துமே கண்­ணீர்மல்க கைய­சைத்து வர­வேற்­றார் அவர்.

இருப்­பி­னும் அவர்­க­ளைக் கட்­டிப்­பி­டித்து ஆரத்தழுவ இன்­னும் சற்று தொலைவே இருந்­தது.

வெளி­யே­றிய வரு­கை­யா­ளர்­கள் கொவிட்-19 பரி­சோ­தனைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­னர்.

கண்­ணீ­ரைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை­யில் ஆவ­லு­டன் காத்­தி­ருந்த அவர், பரி­சோ­தனை முடிந்து திரும்­பிய பெற்­றோ­ரைக் கட்­டிப்­பி­டித்து மனநிம்­ம­தி­யில் பெரு­மூச்சு விட்­டார்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் பணி ஓய்வுபெற்ற அப்பா, சென்­னை­யில் தமது ஓய்­வுக்காலத்­தைச் செல­விட எண்ணி அம்­மா­வு­டன் சென்­றார். ஆனால் கொரோ­னா­வின் சீற்­றம் அவர்­களை மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்கு வரவோ பிள்­ளை­கள் அவ­ரைச் சென்று சென்­னை­யில் பார்க்­கவோ வாய்ப்பு வழங்­க­வில்லை. பர­வல் அதி­க­மி­ருந்த காலத்­தில் வீட்டை விட்­டுகூட வெளியே வரா­மல் இல்­லத்­தி­லேயே முடங்­கிய நிலை­யில் ஓய்­வுக் காலத்தை இது­வரை செல­விட்டு நேற்றுக் காலை சிங்­கப்­பூர் வந்து அடைந்­த­னர்.

"அவர்­களை நேரில் பார்த்து வர­வேற்­ப­தில் விவ­ரிக்க முடி­யாத மனநிம்­மதி அடை­கி­றேன்," என்று ஆனந்­தக் கண்­ணீரை விட்­ட­படி கூறி­னார் சாந்­தினி.

கிட்­டத்­தட்ட ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் பய­ணி­கள் சேவையை சென்­னை­யி­லி­ருந்து தொடங்கிய சிங்­கப்­பூர் ஏர்­லைன் ஸின் முதல் விமா­னம் நேற்று காலை 5.35 மணிக்கு சாங்கி விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தது. கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழல் கார­ண­மாக இந்­தி­யா­வின் எல்லா நக­ரங்­க­ளுக்­கும் வெளி­நாட்டு விமா­னங்­கள் வர்த்­த­கப் பய­ணி­கள் சேவையை வழங்­கு­வதை இந்­திய அரசு கடந்த ஆண்டு நிறுத்­தி­யது.

அண்­மை­யில் இரு நாட்டு அர­சாங்­கங்­களும் செய்துகொண்ட ஒப் பந்தத்தின் விளை­வாக மீண்­டும் சேவை­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டை­யில் 'வேக்­சி­னே­டட் டிரா­வல் லேன்' (விடிஎல்) எனும் தடுப்­பூ­சி போட்­டோ­ருக்­கான பய­ணத்­த­டத் திட்­டத்­தின்­வழி சென்னை, மும்பை, புது­டெல்லி ஆகிய நக­ரங்­க­ளி­லி­ருந்து தின­மும் தலா இரண்டு சேவை­கள் நவம்­பர் 29ஆம் தேதி­யி­லி­ருந்து வழங்­கப்படும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் வந்து இறங்­கிய பய­ணி­கள் உணர்ச்­சி பொங்கக் காட்­சி­ய­ளித்­த­னர். சில­ருக்­குப் புது நட்­பு­களும் கிடைத்­துள்­ளன. சென்னை விமான நிலை­யத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்­த­டை­யும்­வரை திக்­கு­முக்­காடி நின்ற சதா­சி­வ­னுக்கு உத­விய அப்­துல் ரஹீம், சாங்கி விமான நிலை­யத்­தில் விடை­பெ­றும்­போது கை

கு­லுக்கி, "மீண்­டும் சந்­திப்­போம். வீட்­டிற்கு வாருங்­கள்," என்று நன்றி உணர்­வோடு கூறி­னார்.

சிவ­கங்கை மாவட்­டத்­தைச் சேர்ந்த வினோத் குமார், கட்­டு­

மா­னத் துறை­யில் பணிபு­ரிய சிங்­கப்­பூர் வந்­தார்.

"வழக்­க­மாக மது­ரை­யி­லி­ருந்து வரு­வேன். எனது முத­லாளி இந்த முறை சென்­னை­யி­லி­ருந்து வரச் சொன்­னார். வந்­த­டை­யும் வரை எல்லாத் தக­வல்­களும் தெளி­வா­கவே இருந்­தன. என்­னென்ன செய்ய வேண்­டும் என்­ப­தெல்­லாம் சுமு­க­மாக இருந்­தது," என்று கூறி­னார் வினோத்.

ஒரே நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிய வந்­தி­ருந்த ஐவ­ரில் அவரும் ஒரு­வர். வெவ்­வேறு கார­ணங்­க­ளுக்­காக இந்­தி­யா­விற்­குச் சென்­ற­வர்­கள், அல்­லது வேலைக்­காக சிங்­கப்­பூர் வர காத்­தி­ருந்­தோ­ருக்கு விடி­ய­லைத் தந்­துள்ளது 'விடி­எல்' திட்­டம்.

"திட்­டத்தை இந்­தி­யா­வி­லி­ருந்து வரு­வோ­ர்க்­கும் நீட்­டிக்க இருப்­ப­தை சிங்கப்பூர் அரசாங்கம் கூறி­

ய­துமே விமானப் பயணச் சீட்டு விற்பனை விற்­ப­னை தொடங்­கி­விட்­டதா என்­ப­தை அறிய ஆவ­லு­டன் காத்­தி­ருந்­தேன். விற்­ப­னை தொடங்­கி­ய­ முதல் நாளிலேயே பெற்­றோ­ருக்­காக பயணச்சீட்டுகளை வாங்­கி­னேன்," என்­றார் சாந்­தினி.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய முதல் எஸ்ஐஏ 'விடிஎல்' விமானம்