உணவு விநியோகத்தைக் காட்டிலும் உணவு வாங்கிச் செல்லும் போக்கு இவ்வாண்டு அதிகரித்து உள்ளதாக வாடிக்கையாளர் மனநிறைவு ஆய்வு தெரிவிக்கிறது.
கொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளிலும் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவது தொடர்பான விதி
களிலும் அடிக்கடி மாற்றம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் உணவு வாங்கிச் செல்லும் பழக்கம் வளருவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
உணவகங்கள், விரைவு உண வகங்கள், காப்பிக் கடைகள் போன்றவற்றிற்கு நேரில் வந்து வாங்கிச் செல்வது இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இந்த வருடாந்திர ஆய்வின் முடிவுகள் நேற்று வெளி
யிடப்பட்டன.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்
கலைக்கழகத்தில் உள்ள சேவை உன்னத பயிற்சி மையம் இந்த ஆய்வை நடத்தியது.
சுற்றுப் பயணத் துறைகளிலும் உணவு, பானம் தொடர்பிலும் வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் மனப்போக்கின் அடிப்
படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாண்டு ஜூலை மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் 2,600 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
தாங்கள் விரும்பும் உணவைப் பெற உணவகத்திற்குச் சென்று சாப்பிடுவீர்களா, உணவகத்தில் அதனை வாங்கிச் செல்வீர்களா அல்லது வீட்டிலிருந்தபடி உணவு விநியோகத்திற்கு ஏற்பாடு செய்வீர்களா என்னும் கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.
அதேநேரம் உணவு, பான நிலையங்கள், உணவகங்கள், விரைவு உணவகங்கள், காப்பிக் கடைகள் ஆகியவற்றில் எதனை நோக்கி அடிக்கடி செல்வீர்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
உணவகங்களுக்குச் சென்று உணவு வாங்கிச் செல்வதாக 32.7% பேர் கூறினர். இது கடந்த ஆண்டு 25.9% ஆக இருந்தது. விரைவு உணவகங்களில் இருந்து வாங்கிச் செல்வோர் விகிதமும் 49.4 விழுக்காட்டிலிருந்து 57.4 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.

