தொடக்கப் பள்ளிகளிலும் உயர்
நிலைப் பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 130 மாணவர் நல்வாழ்வு அதிகாரிகளை நியமிக்க கல்வி அமைச்சு முயன்று வருகிறது.
ஆபத்தில் உள்ள மாணவர்
களுக்கு உதவ தமது அமைச்சு எடுத்து வரும் முயற்சிகளை விளக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் பங்கேற்றுப் பேசிய இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் இத்தகவலைத் தெரிவித்தார். பள்ளிக்கு வராத மாணவர்களின் தேவைகளைக் கண்டறிவதில் இத்தகைய மாணவர் நலன் அதிகாரிகள் கவனம் செலுத்துவர்.
இதற்காக ஆசிரியர்களுடனும் சமூகப் பங்காளிகளுடனும் இணைந்து அவர்கள் பணியாற்றுவர். தற்போது 105 மாணவர் நல்வாழ்வு அதிகாரிகள் பள்ளிகளில் சேவையாற்றுகின்றனர்.
எளிதில் ஆபத்தில் சிக்கக்
கூடிய மாணவர்கள் மற்றும் அவர்
களின் குடும்பங்களை ஆதரிக்க ஏற்படுத்தப்பட்ட 'அப்லிஃப்ட்' என்னும் பல்வேறு அமைப்புகளின் பணிக்குழுவுக்கு டாக்டர் மாலிக்கி தலைமை ஏற்றுள்ளார். நீண்டகாலமாக பள்ளிகளுக்கு வராதது, சட்ட வழக்குகளைச் சந்திப்பது போன்ற கடும் நெருக்கடிக்கு ஆளாகும் மாணவர்களுடன் நல்வாழ்வு அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

