செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
06228b2d-ddd4-4a4a-92e3-530814c00793
-

தடுப்பூசி சமநிலைக்கான நினைவூட்டலே ஓமிக்ரான தொற்று

தடுப்­பூசி சம­நிலை மற்­றும் பன்­மு­கத்­தன்மை ஆகி­ய­வற்­றின் அவ­சி­யத்­துக்­கான நினை­வூட்­டலே புதிய கொவிட்-19 வகை ஓமிக்­ரான் தொற்று என்று டாக்­டர் நியோ­லீன் ஹேஸர் தெரி­வித்­துள்­ளார். சிங்­கப்­பூர் முன்­னின்று நடத்­தும் உலக ஆட்­சி­மு­றைக் குழு என்­னும் 30 நாடு­கள் ஒன்­றி­ணைந்த நிகழ்வு தடுப்­பூசி பன்­மு­கத்­தன்­மை­யின் முக்­கி­யத்­து­வம் மீது கவ­னம் செலுத்­து­கிறது. உலக சுகா­தா­ரப் பாது­காப்­பில் நில­வும் இடை­வெ­ளியை நீக்க தடுப்­பூ­சி சம­நி­லைக்கு சிறிய நாடு­கள் குரல் கொடுத்து வரு­வ­தா­க­வும் அதன் முன்­னோ­டி­யாக இந்­நி­கழ்வு அமை­வ­தா­க­வும் டாக்­டர் ஹேஸர் தெரி­வித்­துள்­ளார். 'நமது எதிர்­கா­லத்­தைக் காப்­ப­தில் சிங்­கப்­பூ­ரும் பன்­முக ஆட்சிமு­றை­யும்' என்­னும் சொற்­பொ­ழி­வுத் தொட­ரில்

பங்­கேற்று அவர் ேபசி­னார்.

முதலீடுகளில் தொற்றுநோய் தாக்கம் குறித்து அதிபர் ஆலோசனை

அடுத்த ஆண்டுக்கான அரசாங்க வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்கான பணிகள் தொடங்கி விட்டன. சிங்கப்பூரின் சொத்துகள் மீது எதிர்பார்க்கப்படும் நீண்டகால நிகர்நிலை வருமான விகிதம் தொடர்பாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்குடனும் இதர அதிகாரிகளுடனும் அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். கொவிட்-19 நிலவரமும் பருவநிலை மாற்றமும் முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதன் மீது கவனம் செலுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அரசாங்கம் அதன் வருடாந்திர வரவுசெலவுத் திட்டத்தில் தற்போதைய தேவைகளுக்கு நிதி கையிருப்பிலிருந்து எவ்வளவு சேர்க்கலாம் என்பது தொடர்பான அம்சங்கள் என்பதால் இந்த ஆலோசனை முக்கியமாக நடத்தப்பட்டது.

உணவகத்தில் தீ: 20 பேர் தப்பினர்

திங்­கட்­கி­ழமை இரவு 812 நார்த் பிரிட்ஜ் ரோட்­டில் உள்ள ஓர் உண­வ­கத்­தில் திடீ­ரென தீ மூண்­ட­தைத் தொடர்ந்து அங்­கி­ருந்து 20 பேர் வரை தாமாக வெளி­யே­றி­விட்­ட­தாக சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை (எஸ்­சி­டி­எஃப்) தெரி­வித்­தது. சம்­ப­வம் குறித்­துத் தங்­க­ளுக்கு இரவு 8.45 மணி­வாக்­கில் தக­வல் கிடைத்­த­தாக அந்­தப் படை 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் கூறி­யது. தீப்­பி­டித்த இடத்­தில் 'நன் ஹுவா சாங் ஃபிஷ்-ஹெட்' உண­வ­கம் இருந்­ததை அந்த செய்­தித்­தாள் கண்­ட­றிந்­தது. உண­வ­கத்­தின் சமை­ய­ல­றை­யில் இருந்த காற்று வெளி­யேற்­றக் கரு­வி­யில் தீப்­பற்றி எரிந்­த­தா­க­வும் இரண்டு தண்­ணீர் பீய்ச்­சும் இயந்­தி­ரம் மூலம் தீ அணைக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் இச்­சம்­ப­வத்­தில் எவ­ருக்­கும் காய­மில்லை என்­றும் எஸ்­சி­டி­எஃப் தெரி­வித்­தது. அடுப்பு, அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­கள் மற்­றும் காற்று வெளி­யேற்­றக் கரு­வி­கள் எண்ெணய்ப்பிசுக்கு இல்­லா­த­வாறு பார்த்­துக்­கொள்­ளு­மா­றும் அக்கரு­வி­களை முறையாகப் பரா­ம­ரிக்­குமா­றும் பொது­

மக்­களை எஸ்­சி­டி­எஃப் கேட்­டுக்­கொண்டது.