$156.9 மி. மெடிஃபண்ட் மருத்துவ நிதி வழங்கப்பட்டுள்ளது

$156.9 மி. மெடிஃபண்ட் மருத்துவ நிதி வழங்கப்பட்டுள்ளது

2 mins read
2b6f410f-1b9a-4043-a4a0-fa6ddde6c22d
-

மருத்­துவ அறக்­கட்­டளை நிதி எனப்­படும் 'மெடி­ஃபண்ட்' திட்­டம் வழி கடந்த நிதி­யாண்­டில் மொத்­தம் $156.9 மில்­லி­யன் உத­வித்­தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது. 2020ஆம் ஆண்டு ஏப்­ரல் 1ஆம் தேதி தொடங்கி இவ்­வாண்டு மார்ச் 31ஆம் தேதி­யு­டன் முடி­வடைந்த நிதி­யாண்­டில் வச­தி­குறைந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குத் தங்­க­ளின் மருத்­து­வச் செல­வு­களுக்­காக இத்­தொகை வழங்­கப்­பட்­டது.

முந்­தைய நிதி­யாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் வழங்­கப்­பட்ட தொகை $2.2 மில்­லி­யன் குறைவு என்று கூறப்­பட்­டது. கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழ­லில் பொதுச் சுகா­தார பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், இடைக்­கால, நீண்­ட­கா­லப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு நோயாளி வருகை குறைந்­தி­ருந்­த­தால் உதவி நாடி­ய­வர் எண்­ணிக்­கை­யில் இந்­தச் சரிவு ஏற்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று குறிப்­பிட்­டது.

கிட்­டத்­தட்ட 1.1 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன. இது முந்­தைய நிதி­யாண்­டு­டன் ஒப்­பிடு­கை­யில் 5.3% குறைவு.

பொதுச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களை நாடிய நோயா­ளி­களுக்கு $120 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட உத­வித் தொகை வழங்­கப்­பட்­டது. முந்­தைய நிதி ஆண்­டில் இத்­தொகை ஏறத்­தாழ $123 மில்­லி­ய­னாக இருந்­தது.

இடைக்­கால மற்­றும் நீண்­ட­கா­லப் பரா­ம­ரிப்பு வச­தி­களை நாடிய நோயா­ளி­க­ளுக்கு மொத்­தம் $36.6 மில்­லி­யன் உதவி வழங்­கப்­பட்­டது. முந்­தைய நிதி ஆண்­டில் பதி­வான $36.2 மில்­லி­ய­னைக் காட்­டி­லும் இது அதி­க­மா­கும்.

ஒவ்­வொரு உள்­நோ­யாளி சிகிச்­சைக்­கும் சரா­ச­ரி­யாக $841 மதிப்­பி­லான 'மெடி­ஃபண்ட்' உதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன் ஒவ்­வொரு வெளி­நோ­யாளி சிகிச்­சைக்­காக சரா­ச­ரி­யாக $93 வழங்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்க நிதி­உதவி, காப்­பு­றுதி, 'மெடி­சேவ்' கழி­வு­க­ளுக்­குப் பின்­னும் மருத்­து­வச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க முடி­யாத நிலை­யில் உள்ள வசதி குறைந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மெடி­ஃபண்ட் துணை­பு­ரி­கிறது.

மூத்­தோர்க்கு 'மெடி­ஃபண்ட் சில்­வர்', இளம் பிள்­ளை­க­ளுக்கு 'மெடி­ஃபண்ட் ஜூனி­யர்' ஆகிய வெவ்­வேறு திட்­டங்­கள் உள்­ளன.