வீடுகளின் குப்பைகளை அகற்றுவதற்கு விதிக்கப்படும் கட்டணம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளது. செயல்பாட்டு, மனிதவளச் செலவுகள் அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டது.
பொதுக் கழிவுகள் அகற்றப்படும் திட்டத்தின்கீழ் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் கூட்டுரிமை வீடுகளும் அடங்கிய குடியிருப்புகளுக்கு தற்போது மாதம் $8.25 கட்டணம் விதிக்கப்படுகிறது. இது $9.63ஆக உயரவுள்ளது.
தரைவீடுகளில் உள்ளோர், மாதம் $32.07 கட்டணம் செலுத்துவர் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டணங்கள் அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்பட்டது.

