யோகா பயிற்சி அளித்த இந்திய நாட்டவர் மீது 10 மானபங்க குற்றச்சாட்டுகள்

யோகா பயிற்சி அளித்த இந்திய நாட்டவர் மீது 10 மானபங்க குற்றச்சாட்டுகள்

1 mins read
10edf9fe-7bfe-4c9d-a773-e1398f8dc300
-

யோகா வகுப்­பு­க­ளின்­போது பெண்­கள் ஐவ­ரைத் தகாத முறை­யில் தீண்­டி­ய­தாக யோகா பயிற்­சி­யா­ளர் மீது நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­டது.

தற்­போது வேலை­யில்­லாத அந்த 32 வயது இந்­திய நாட்­ட­வர் மீது 10 மான­பங்க குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

ஆட­வர் 2019ஆம் ஆண்­டுக்­கும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் பெண்­க­ளின் அந்­த­ரங்க உடல் பாகங்­க­ளைத் தொட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. காணொளி இணைப்பு வழி நேற்று ஆட­வர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­னார். $15,000 பிணைத் தொகை­யில் அவர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

ஆட­வர் மீதான வழக்கு விசா­ரணை இம்­மா­தம் 14ஆம் தேதிக்­குத் தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக ஏப்­ரல் 2018ல், யோகா பயிற்­சி­யா­ள­ராக இருந்த வேறொரு இந்­திய நாட்­ட­வர்க்கு ஒன்­பது மாதச் சிறைத் தண்­டனை­யும் $1,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

தண்­ட­னைக்கு எதி­ராக மேல்­மு­றை­யீடு செய்த அந்த ஆட­வர்க்கு, பின்­னர் சிறைத் தண்­டனை மேலும் ஓராண்டு நீட்­டிக்­கப்­பட்­ட­து­டன் மூன்று பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.