மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்க்கு உடந்தையாக இருந்த தாய் மீது குற்றச்சாட்டு

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்க்கு உடந்தையாக இருந்த தாய் மீது குற்றச்சாட்டு

1 mins read
e45f5e0a-8c2f-4f0a-b997-8ba3bdf50506
-

தொடக்­க­நிலை ஐந்­தில் படித்­துக்­கொண்­டி­ருந்த மகளை, தன்­னுடைய காத­லன் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கி­ய­போது, உத­விக்­காக அந்­தச் சிறுமி கால்­க­ளைச் சிறு­மி­யின் தாய் பிடித்­துக்­கொண்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அத்­து­டன் மாது தன் காத­ல­னு­டன் பாலி­யல் செய­லில் ஈடு­பட்­ட­போ­தெல்­லாம் சிறு­மி­யைப் பார்க்­கும்­படி வற்­பு­றுத்­தி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. நேற்று 62 வய­து­டைய அந்த மாது, அவ­ரின் காத­ல­னான 70 வயது ஆட­வர் இரு­வர் மீது­மான வழக்கு, உயர் நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்­கப்­பட்­டது.

தன் மக­ளுக்கு 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பாலி­யல் துன்­பு­றுத்­தல் அளித்த ஆட­வர்க்கு உடந்­தை­யாக அந்­தச் சிறு­மி­யின் தாயார் இருந்­தி­ருக்­கி­றார் என்று குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

சிறுமி தனக்கு நடந்­த­தைப் பற்றி காத­ல­னி­டம் கூறி­யதை அடுத்து போலி­சா­ரி­டம் புகார் அளிக்­கப்­பட்­டது.

சிறு­மி­யின் காத­ல­னும் இரு சகோ­த­ரர்­களும் சாட்­சி­யம் அளிப்­பர் என்று கூறப்­ப­டு­கிறது.