உலகளாவிய நிலையில் ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை பரவி வருவதால் விடுமுறைப் பயணத் திட்ட மாற்றத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று உள்ளூர் பயணத்துறை நிபுணர்கள் சிங்கப்பூரர்களிடம் தெரிவித்துள்ளனர்.
நிலைமை மிக வேகமாக மாறக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்த தேவையில்லாப் பயணத் திட்டத்தை இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தென்கொரியா நேற்று முன்தினம் அறிவித்தது.
இத்தகைய திடீர் மாற்றங்கள் சிங்கப்பூர் பயணிகளைப் பதற்றம் அடையச் செய்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் இரண்டு சுற்றுப்பயண முகவைகள் தெரிவித்தன.
தென்கொரியாவின் அறிவிப்பு சிங்கப்பூலிருந்து தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கான பயணத் திட்டத்தின்கீழ் பயணம் செய்வோரையும் பாதிக்குமா என்பதை கண்டுபிடிக்க முகவைகள் விரைகின்றன.
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள சிங்கப்பூரர்களும் கவலையில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக முகவைகள் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளன.
தென்கொரியாவின் அறிவிப்பால் சிங்கப்பூர் பயணிகள் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்கலாம். அல்லது பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள வேறு நாடு
களுக்குச் செல்லாம். அதை விரும்பாதவர்கள் செலுத்திய முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று சான்
பிரதர்ஸ் நிறுவனம் கூறியது.

