17 மரண தண்டனை கைதிகளின் கோரிக்கை நிராகரிப்பு

17 மரண தண்டனை கைதிகளின் கோரிக்கை நிராகரிப்பு

2 mins read
986c6a74-decb-41dc-891e-de3d7cd644f8
-

சிங்­கப்­பூ­ரில் 17 மரண தண்­டனை கைதி­­க­ள் தங்களுக்கு எதிராக இனப்பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை உயர் நீதி­மன்­றம் தள்ளுபடி செய்து உள்ளது.

மலாய் இனத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­ப­தால் மரண தண்­டனை குற்ற வழக்­கில் தங்­க­ளுக்கு எதி­ராக தலைமை சட்ட அதி­காரி பார­பட்­சத்துடன் நடந்து கொண்டார் என்று மனுவில் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

நேற்று அந்த மனு­வை நீதி­பதி வேலரி தியன் தள்ளுபடி செய்தார்.

நீதி­மன்ற நடை­மு­றை­களை அவர்­க­ளு­டைய விண்­ணப்­பம் தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­வ­தாகவும் எழுத்­து­பூர்­வ­மாக அளித்த தீர்ப்­பில் அவர் கூறினார்.

கோரிக்கை மனு­வைத் தாக்­கல் செய்­த­வர்­களில் ஒரு­வர் மட்­டும் மலே­சி­யர். மற்ற அனை­வ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள்.

மலாய் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­படும் வாய்ப்பு மற்ற இனத்­த­வர்­க­ளைக் காட்­டி­லும் அதி­க­மாக இருப்­ப­தாக புள்ளி விவ­ரங்­களை மேற்­கோள்­காட்டி அவர்­கள் மனு­வைத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.

"இந்த வழக்கின் அடிப்­ப­டை வாதமே தவறு என்று கூறிய நீதி­பதி, அவர்­க­ளு­டைய கார­ணம் தெளி­வற்­றது. முழுத்­த­க­வ­லும் இல்­லா­மல் அதற்கு ஏற்ப நீதி­மன்றத்தை செயல்­படக் கோருவது தவறு," என்­றார்.

"குறிப்­பாக வாழ்க்கை ஆபத்­தில் உள்ள சம­யத்­தில் இனம் மற்­றும் சமத்­து­வம் தொடர்­பான கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை கவ­ன­மின்றி கொண்டு வரக் கூடாது. ஊகங்­கள் மீதான, பொருத்­த­மற்ற வழக்­கு­க­ளைக் கொண்டு வரு­வது நீதி­மன்ற செயல்­மு­றை­களை அவ­ம­திக்­கும் செயல் என்று நீதிபதி குறிப் பிட்டார். மரண தண்­டனை சிறை கைதி­களில் ஒரு­வரோ அல்­லது பலரோ தண்­ட­னைக்கு எதி­ராக பல­வ­கை­யில் பல­ மேல்­ முறை­யீடுகளைச் செய்து தோல்வி அடைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த விண்­ணப்­பம் தாக்­கல் செய்­யப்­பட்­டது.