நூலக அதிகாரிகளின் சுமையைக் குறைக்க உதவுகிறது இந்த புதிய வகை இயந்திர மனிதன். சிங்கப்பூரின் பொது நூலகங்களில் புத்தகங்களை ஸ்கேன் செய்யவும் அலமாரிகளில் அடுக்கவும் ரோபோக்கள் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் 'ஆரோரோ' என்ற இந்த ரோபோவை நூலக அதிகாரிகளால் செயல்படுத்தமுடியும்.
நீண்டு சுருங்கும் 'கைகளால்' அலமாரிகளுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் புத்தகங்களை இந்த ரோபோ உள்ளே தள்ளி சீராக அடுக்கும்.
புத்தகங்களை இருந்த இடத்திலிருந்தே துல்லியமாக ஸ்கேன் செய்வதில் வல்லது.
அண்மைக் காலமாக உலகின் பல நாடுகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தீர்வுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதன் தொடர்பில் சிங்கப்பூரிலும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அந்த வரிசையில் இந்த ரோபோவும் அசத்தவந்துள்ளது.
படம்: சென்ஸர்போட்