கொரிய தீபகற்பத்தை அறிந்திட புதிய ஆராய்ச்சி நிலையம்

கொரிய தீபகற்பத்தை அறிந்திட புதிய ஆராய்ச்சி நிலையம்

2 mins read
44243921-3e35-4761-886f-d83396fd2274
-

புதிய ஆராய்ச்சி நிலை­யம் ஒன்றை அமைப்­ப­தன் வழி தென்­கொ­ரிய, வட­கொ­ரிய நாடு­க­ளைப் பற்­றிய அதன் நிபு­ணத்­துவ அறிவை சிங்­கப்­பூர் பெருக்­கிக்­கொள்ள உள்­ளது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­கழகத்­தின் (என்­யு­எஸ்) கிழக்­கா­சிய கல்­விக் கழ­கம் கடந்த மாதம் 29ஆம் தேதி­யன்று கொரிய நிலை­யத்தை நிறு­வி­யது. கொரிய தீப­கற்­பத்­தின் ஆளுமை, அர­ச­தந்­தி­ரம், மேம்­பாடு தொடர்­பில் இந்­நி­லை­யம் ஆரா­ய­வுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

புக்­கிட் தீமா­வின் என்­யு­எஸ் வளா­கத்­தில் அமைந்­துள்ள கிழக்­கா­சிய கல்­விக் கழ­கத்­தில் புதிய நிலை­யம் அமைந்­துள்­ளது. நிலை­யத்தை நேற்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் திறந்து­வைத்­தார்.

பல்­வேறு அம்­சங்­கள் பொருந்தி, கவர்ச்­சி­க­ர­மாக கொரிய தீப­கற்­பம் விளங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்ட டாக்­டர் விவி­யன், பகுப்­பாய்­வுக்­கும் கல்­வி­சார் பணி­க­ளுக்­கும் அப்­பகுதியை ஆராய்­வது மிக­வும் ஏற்­றது என்­றார்.

"தீப­கற்­பத்­தில் ஏற்­பட்­டு­வ­ரும் மேம்­பா­டு­கள் நமக்கு என்ன தெரி­விக்க வரு­கின்­றன என்­ப­தை­யும் அதில் உள்ள நுணுக்­கங்­க­ளை­யும் நாம் மேலும் ஆழ­மா­கப் புரிந்­து­கொள்ள வேண்­டும். அத­னால் நம் மீதும் உல­க­நா­டு­கள் மீதும் ஏற்­படக்­கூ­டிய பரந்த அள­வி­லான தாக்­கத்­தை­யும் நாம் அறிந்­தி­ட­வேண்­டும்," என்­றார் அவர்.

கொரிய நிலை­யத்­தின் தலை­வரும் கிழக்­கா­சிய கல்­விக் கழ­கத்­தின் முதன்மை ஆராய்ச்சி உறுப்­பி­ன­ரு­மான டாக்­டர் லாம் பெங் எர், நிலை­யத்­தின் பொறுப்பை ஏற்­பார்.

கிழக்­கா­சிய வட்­டா­ரத்­தைப் பற்­றிய கல்­விக் கழ­கத்­தின் புரி­தலை, கொரிய நிலை­யம் மேலும் ஆழ­மா­ன­தாக்­கும் என்று டாக்­டர் லாம் பேட்­டி­யின்­போது குறிப்­பிட்­டார்.

"கொரி­யா­வைப் பற்றி புரிந்­து­கொள்­ளா­மல் கிழக்­காசியா, சீனா, ஜப்­பான் பற்றி உங்­க­ளால் புரிந்து­கொள்ள முடி­யாது. அவை அனைத்­துக்­கும் இடையே நீண்­ட­கால வர­லாற்று உற­வு­கள் உண்டு. அந்த உற­வு­கள் நவீன யுக உற­வு­க­ளை­யும் பாதிக்­கின்­றன," என்று விளக்­கினார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் அமெ­ரிக்க, வட­கொ­ரி­யத் தலை­வர்­கள் டிரம்ப், கிம் இரு­வ­ரும் 2018ல் சந்­தித்­துக்­கொண்­ட­தும் இந்­நி­லை­யம் அமை­வற்கு ஒரு கார­ணம் என்­றார் டாக்­டர் லாம்.

கொரிய தீப­கற்­பம் குறித்து தனித்­து­வ­மான தென்­கி­ழக்­கா­சிய கண்­ணோட்­டம் ஒன்றை ஏற்­ப­டுத்த, நிலை­யம் திற­னா­ளர்­க­ளைக் கொண்டு­வர விரும்­பு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இத­னால் சிங்­கப்­பூர், ஆசி­யான் இரண்­டுக்­கும் நம்­ப­க­மான, ஆழ­மான அறிவை ஏற்­ப­டுத்­த­வும் முடி­யும் என்­றார்.

"தென்­கொ­ரியா, வட­கொ­ரியா இரண்­டை­யும் பற்றி சிங்­கப்­பூர் அதன் சொந்த புரிந்­து­ணர்வை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

"இரு நாடு­க­ளு­ட­னும் கொண்­டுள்ள நல்­லு­றவை சிங்­கப்­பூர் தனக்­குச் சாத­க­மாக்­கிக்­கொண்டு இவ்­வாறு செயல்­ப­ட­லாம். இத­னால் கொரி­யா­வு­டன் நல்­லு­றவு வளர்த்­துக்­கொள்­ளாத நாடு­க­ளைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­க­ளுக்­குக் கிடைக்­காத தக­வல்­கள் நமக்­குக் கிட்­ட­லாம்," என்­றார் டாக்­டர் லாம்.

தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லேயே இது­போன்ற நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்ள இதுவே முதல் முறை. இத்­திட்­டத்தை தென்­கொ­ரியா, வட­கொ­ரியா இரண்­டுமே வர­வேற்­றுள்­ள­தாக என்­யு­எஸ் தெரி­வித்­தது.