முன்னாள் எம்.பி.யின் கருத்துக்கு பாட்டாளிக் கட்சி மறுப்பு

முன்னாள் எம்.பி.யின் கருத்துக்கு பாட்டாளிக் கட்சி மறுப்பு

2 mins read
884989cc-fb78-4758-9635-6fc0ebbf2745
2012 பிப்ரவரியில் யாவ் ஷின் லியோங்கைக் கட்சியிலிருந்து நீக்கும் அறிவிப்பை வெளி யிட்ட பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் திரு லோ தியா கியாங், திருவாட்டி சில்வியா லிம். (வலது படம்) யாவ் ஷின் லியோங். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

'புகார் பற்றி மௌனம் காக்குமாறு சொல்லவில்லை'

முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­

பி­னர் யாவ் ஷின் லியோங் பற்றி 2012ஆம் ஆண்டு எழுந்த புகார்­கள் தொடர்­பாக மௌன­மாக இருந்­து­வி­டு­மாறு அவ­ரி­டம் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் சொல்­ல­வில்லை என அக்­கட்­சி­யின் ஊட­கப் பேச்­சா­ளர் லியோன் பெரேரா நேற்று தெரி­வித்­தார். இது தொடர்­பாக பாட்­டா­ளிக் கட்­சியின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் அறிக்கை ஒன்று வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

திரு­ம­ணத்­திற்கு அப்­பாற்­பட்ட உறவு தொடர்­பில் தம் மீது புகார்­கள் கூறப்­ப­டு­வது பற்றி கட்­சி­த் தலை­வர்­க­ளான லோ தியா கியாங், சில்­வியா லிம் ஆகி­யோ­ரி­டம் உடனே தெரி­வித்­த­தா­க­வும் அதற்கு அவர்­கள் மௌன­மாக இருந்­து­வி­டு­மாறு யோசனை கூறி­ய­தா­க­வும் 'ஏமஸ் ராவ்' என்ற பெய­ரில் திரு யாவ் நேற்று முன்தினம் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதிவு தெரி­வித்­தி­ருந்­தது.

2012ஆம் ஆண்டு தாம் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கப்­பட்­டது தொடர்­பாக திரு பிரித்­தம் சிங் கூறிய கருத்­தின் தொடர்­பில் அவ­ரது பதிவு அமைந்­தி­ருந்­தது. அதற்­குப் பதி­ல­ளிக்­கும் வித­மாக பாட்­டா­ளிக் கட்சி அறிக்கை வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

"மௌனம் காக்­கு­மாறு திரு லோவும் திரு­வாட்டி லிம்­மும் கூற­வில்லை எனத் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ள­னர். மாறாக, பாட்­டா­ளிக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழு­வின் முன்­னர் முன்­னி­லை­யாகி விளக்­கம் அளிக்­கு­மாறு திரு யாவுக்­குக் கடி­தம் அனுப்­பப்­பட்டு இருந்­தது. ஆனால் அவர் அவ்­வாறு செய்­ய­வில்லை," என்று திரு பெரேரா பெய­ரில் வெளி­யி­டப்­பட்டு உள்ள பாட்­டா­ளிக் கட்­சி­யின் ஃபேஸ்புக் பதிவு தெரி­வித்து உள்­ளது.

திரு யாவ், 2011ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் ஹவ்­காங் தனித்தொகு­தி­யில் பாட்­டா­ளிக் கட்சி சார்­பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­ற­வர். அவர் தகாத உறவு வைத்­தி­ருப்­ப­தாக 2012ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் வதந்­தி­கள் பர­வின. மறு­ மா­தமே (2012 பிப்­ர­வரி) கட்­சி­யி­லி­ருந்து அவர் நீக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அந்­தத் தொகு­தி­யில் இடைத்­தேர்­தல் நடத்­தும் நிலை ஏற்­பட்­டது.

திரு­வாட்டி ரயீசா கான், செங்­காங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­யது தொடர்­பா­கக் கடந்த வாரம் நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் கூட்­டத்­தின்­போது திரு யாவ் தொடர்­பான விவ­கா­ரம் எழுப்­பப்­பட்­டது.