தாய்லாந்து மற்றும் கம்போடியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனிமை உத்தரவு விலக்கு பெற்ற பயணச் சேவையை நடத்த மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஏஷியா அனுமதி பெற்றுள்ளது.
'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டவர்களுக்கான பயணத் தடத் திட்டம் அடுத்த வாரம் மேலும் ஆறு நாடுகளுக்கு விரிவு படுத்தப்பட உள்ள நிலையில் ஜெட்ஸ்டார் ஏஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 15 முதல் பேங்காக்கிலிருந்து சிங்கப்பூருக்கு வாரம் ஐந்து விடிஎல் விமானங்கள் வரை தான் இயக்கப்போவதாக அது நேற்று தெரிவித்தது. மேலும் கம்போடியாவின் நோம்பென் நகரிலிருந்து சிங்கப்பூருக்கான விமானச் சேவையை டிசம்பர் 16 முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த வழித்தடத்திலும் வாரம் ஐந்து விடிஎல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் ஜெட்ஸ்டார் ஏஷியா மேலும் தெரிவித்துள்ளது.

