உள்துறை குழு முன்களப் பணியாளர்களில் சுமார் 30 விழுக்காட்டினர் அல்லது 10,090 பேர் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். இது நவம்பர் 26ஆம் தேதி நிலவரம். இந்த முன்களப் பணியாளர்களில் 18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட அதிகாரிகளும் இடம்பெற்று உள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிங்கப்பூர் காவலர் படை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் சிறைச் சேவை போன்றவற்றைச் சேர்ந்தவர்கள். முழுநேர தேசிய சேவையாளர்களும் இந்தக் குழுவில் உள்ளனர். இது தொடர்பாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் பேசிய உள்துறை அமைச்சின் பேச்சாளர், "தகுதி உள்ள அதிகாரிகள் அனை
வரும் 2022 முதல் காலாண்டிற்குள் பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டும் என்பது உள்துறைக் குழுவின் இலக்கு," என்றார்.
இவர்கள் மொடர்னா அல்லது ஃபைசர்-பயோஎன்டெக் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பின்னர் இரு வாரங்
களுக்குக் கடுமையான உடலுழைப்புத் தேவைப்படும் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவர்.

