நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துகள் இயக்கப் பொறியியல் நிலையம் புதிய நுண்சில்லு ஒன்றை உருவாக்கி இருக்கிறது.
கைவிரல் நகத்தைவிட சிறியதாக இருக்கும் அந்தக் கணினிச் சில்லு, பங்குச் சந்தையில் கைமாறும் பங்குகளின் செயல்திறன் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கும்.
கொவிட்-19 குழுமங்கள் போன்ற முன்மாதிரி கட்டமைப்புகளை, தகவல்களை குறிமுறைக்கு மாற்றும்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங், QSec என்ற அந்த நிலையத்தை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
துகள் இயக்கப் பொறியியல் (குவாண்டம்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் பல கணினிச் சில்லுகளை உருவாக்குவதன் தொடர்பில் அந்த நிலையம் ஆய்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துகள் இயக்கப் பொறியியல் ஆய்வுகளில் ஒரு முன்னணி மையமாகத் திகழ்வது சிங்கப்பூரின் இலக்கு என்று அந்த நிகழ்ச்சியில் பேசிய இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் சுப்ரா சுரேஷ் தெரிவித்தார். துகள் இயக்கப் பொறியிய லில் தேசிய ஆய்வு அறநிறுவனம் 2018 முதல் $120 மில்லியனுக்கும் அதிக தொகையை முதலீடு செய்து இருக்கிறது என்றார் அவர்.
அந்தப் புதிய நிலையம் 2018 முதல் செயல்படுகிறது. என்றாலும் கொவிட்-19 காரணமாக அதன் அதிகாரபூர்வ தொடக்கவிழா தாமத மடைந்து வந்தது.
துகள் இயக்கப் பொறியியல் இடம்பெறும் முன்னேற்றங்களை நடைமுறை உலகிற்கான தீர்வுகளாக மாற்றுவது ஆய்வாளர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது என்று பேராசிரியர் சுரேஷ் தெரிவித்தார்.
இதில் புதிய நிலையம் உருவாக்க இலக்கு நிர்ணயித்து இருக்கும் கணினிச் சில்லுகள் பெரும் உதவியாக இருக்கும் என்றார் அவர். புதிய நிலையத்தில் 30 ஆய்வாளர்கள் செயல்படுகிறார்கள். அதற்குக் கல்வி அமைச்சு மானியமும் இந்தப் பல்கலைக்கழகமும் நிதி உதவி அளிக்கின்றன.

