மனநலன் பற்றிய பல்வேறு தகவல்களையும் தெரிந்துகொள்ள விரைவில் பெற்றோருக்கு உதவி கிடைக்கும்.
உடல், மனநலப் பாதிப்பு இல்லாமல் இணையத்தைப் பயன்படுத்து வது பற்றியும் அவர்கள் அதிகமான அறிவைப் பெறுவார்கள். அதன் காரணமாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் மனநலப் பிரச்சினைகள் பற்றி ஒளிவுமறைவு இல்லாமல் ஆக்ககரமான முறையில் பேச முடியும்.
மனநலனைப் பொறுத்தவரை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவ விரும்புகிறார்கள் என்பதால் கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு கல்வி, பயிற்சி வளங்களை வழங்க இருக்கிறது.
அதன்மூலம் அவர்கள் சிறந்த முறையில் தங்கள் பிள்ளைகளுக்கு விளக்கமளிக்க முடியும்.
இளையர்களிடம் மனநலம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய 12 முதல் 35 வரை வயதுள்ள 675 பேரை உள்ளடக்கி 'சில்வர் ரிப்பன் (சிங்கப்பூர்)' என்ற அமைப்பு ஜூலை மாதத்திற்கும் டிசம்பர் மாத தொடக்கத்திற்கும் இடையில் ஓர் ஆய்வை நடத்தியது.
அதில் கலந்துகொண்டவர்களில் 98 விழுக்காட்டினர் மனஉளைச்சல் தங்களுக்கு இருப்பதாகக் கூறினர். தனிமையை உணர்வதாக 88% தெரிவித்தனர். இழப்பு ஏற்பட்டுவிட்ட எண்ணம் தங்களி டம் இருப்பதாக 89% கூறினர்.
சில நேரங்களில் உயிர்மாய்ப்பு எண்ணம்கூட தங்களுக்கு ஏற்பட்டதாக 36 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இதனையடுத்து புதிய முயற்சிகள் இடம்பெறுகின்றன.
சில்வர் ரிப்பன் மனநல விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று மெய்நிகர் ரீதியில் நடந்தது. அதில் கலந்துகொண்ட கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
பெற்றோரின் எதிர்பார்ப்பு, சொந்த எதிர்பார்ப்புகள், கொவிட்-19 உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்கள் காரணமாக மனநலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று இளையர்களில் பலரும் தெரிவித்துள்ள தாக அமைச்சர் கூறினார்.

