வேலையிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்
களின் உற்பத்தித்திறனில் அடிக்கடி குறைபாடு ஏற்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சக ஊழியர்களிடையே கசப்பான உறவுகள் இருப்பதால் வேலையில் அவர்களுக்குப் போதுமான மனநிறைவு கிடைப்பதில்லை எனவும் செயலாற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான பெண்கள் நலச்சங்கம் (அவேர்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் வேலையைக் கைவிடுவதாகவும் பல மாதங்கள் வேலையின்றி இருப்பதாகவும், இறுதியில் வேறு வழியின்றி குறைந்த சம்பள வேலைகளை அவர்கள் ஏற்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.
'சிங்கப்பூர் பெண்களுக்கு வேலையிட பாலியல் துன்புறுத்தலால் வாழ்க்கைத்தொழில் மற்றும் நிதியில் ஏற்படும் பாதிப்புகள்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
பெண்களின் வாழ்க்கைத்தொழிலில் வேலையிட பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களிடம் காணப்படும் குறுகிய காலப் பாதிப்புகளாக உற்பத்தித்திறன் குறைவு, மனைநிறைவு இன்மை, சக ஊழியருடனான உறவில் இறுக்கம் போன்றவை பட்டி
யலிடப்பட்டுள்ளன.
அதேநேரம், துன்புறுத்தல் காரணமாக தங்களது வேலையைக் கைவிட்டு வேலையிடத்தைவிட்டு வெளியேறுவது, குறைந்த சம்பளம் தரும் வேறு வேலைக்குச் செல்வது, பொருளியல் பாதுகாப்பில் ஏற்படும் தாக்கம் போன்றவை நீண்டகால பாதிப்புகளாக ஆய்வு குறிப்பிடுகிறது.

