பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 136 சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இவர்கள் 15 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் என்று காவல்துறை நேற்று கூறியது.
ஒருவார காலம் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் பிடிபட்ட இவர்களில் 32 பெண்களும் அடங்குவர்.
போதைப்பொருள் வைத்திருத்தல், விபசாரம், சூதாட்டம், கடன்முதலைகளுக்கு உதவி, கடன் மோசடி, தலைமறைவுக் கும்பலில் இடம்பெற்றிருத்தல் ஆகிய குற்றங்கள் தொடர்பாக இவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை முடிவடைந்த சோதனை நடவடிக்கையை ஜூரோங் காவல்துறை பிரிவு முன்னின்று நடத்தியது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் மற்றும் சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்நடவடிக்கையில் இணைந்து இருந்தனர்.
சிங்கப்பூர் சுங்கத்துறை, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் சேர்ந்து நடத்திய சோதனையில் 35 வயது ஆடவர் பிடிபட்டார். சுங்கம் மற்றும் குடிநுழைவுச் சட்டங்
களின்கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டோரில் 10 பெண்கள் உள்ளிட்ட 14 பேரைக் கொண்ட கும்பலும் அடங்கும். 18 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள் இணைய வர்த்தக மோசடி, வர்த்தகக் குற்றங்கள் போன்றவை தொடர்பில் விசாரிக்கப்படுகின்றனர்.
$440,000க்கும் மேற்பட்ட தொகை ஏமாற்றப்பட்டதாக தீவு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 102 மோசடிப் புகார்களுக்கும் இந்தக் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் தொடர் முயற்சி
களின் ஒரு பகுதியாக குற்றச் செயல்களுக்கு எதிரான இந்த வேட்டை நடத்தப்பட்டதாக ஜூரோங் காவல்துறை பிரிவு உதவி ஆய்வாளர் ஷீ டெக் ஸி தெரிவித்துள்ளார்.

