33 முன்மாதிரித் தொண்டூழியர்களுக்கு விருது

2 mins read
cde4c4c7-7394-4572-89de-5717699cc294
டாக்டர் ராமசுவாமி அகிலேஸ்வரனுக்கு 'உலகக் குடிமகன் விருது' வழங்கினார் அதிபர் ஹலிமா யாக்கோப். படம்: அதிபரின் ஃபேஸ்புக் -

மற்­ற­வர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யா­கத் திக­ழும் 33 தொண்­டூ­ழி­யர்­கள் சிங்­கப்­பூர் அனைத்­து­லக அற­நி­று­வ­னத்­தின் (எஸ்­ஐ­எஃப்) விருது வழங்­கிக் கௌர­விக்­கப்­பட்டு உள்­ள­னர்.

வழக்­க­மாக ஈராண்­டுக்கு ஒரு­முறை இவ்­வி­ருது வழங்­கும் நிகழ்ச்சி நடை­பெ­றும். இவ்­வாண்டு சிங்­கப்­பூர் அனைத்­து­லக அற­நி­று­வ­னத்­தின் 30ஆம் ஆண்டு நிறை­வை­யொட்­டி­யும் இந்த கௌரவ விருது வழங்­கும் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. நேர­டி­யாக நிகழ்­வில் பங்­கேற்­றோர் தவிர 18 நாடு­

க­ளி­லி­ருந்து மெய்­நி­கர் வாயி­லா­க­வும் பலர் கலந்­து­கொண்­ட­னர்.

அற­நி­று­வ­னத்­தின் பிர­தி­நி­தி­களும் சிங்­கப்­பூர் தூத­ரக அலு­வ­லர்­களும் பங்­கேற்­பா­ளர்­களில் அடங்­கு­வர். விருது பெற்­ற­வர்­களில் நோய் தணிப்­புப் பரா­

ம­ரிப்பு நிபு­ணர் ராம­சு­வாமி அகி­லேஸ்­வ­ர­னும், 62, ஒரு­வர். சிங்கப்­பூர் அனைத்­து­லக அற­நி­று­வ­னத்­தின் தொண்­டூ­ழி­ய­ராக 12 ஆண்­டு­க­ளாக இருந்து வரும் இந்த மருத்­து­வர், இந்­தோ­னீ­சி­யா­வில் படுத்த படுக்­கை­யாக இருந்த பதின்மவயது இளை­யர் ஒரு­வ­ருக்கு அவ­ரது இறு­திக் காலத்­தில் கனி­வன்பு செயல் மூலம் மன­ம­கிழ்வை ஏற்­ப­டுத்­தி­னார்.

எலும்புப் பகுதியில் கட்டி ஏற்பட்டதால் கால் துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில் தமது நண்­பர்­களில் ஒரு­வர்­கூட தம்மை வந்து பார்க்­க­வில்லை என்­றும் தனி­மைச் சிறை­யில் இருப்­ப­து­போல உணர்­வ­தா­க­வும் திரு அகி­லேஸ்­வ­ர­னி­டம் அந்த இளை­யர் பகிர்ந்­து­கொண்­டார். உட­ன­டி­யாக, தாதி­யர் மூலம் அவ­ரது நண்­பர்­களை வர­வ­ழைத்து இளை­ய­ரைச் சந்­திக்­கச் செய்­தார். அதில் அந்த இளை­யர் பூரித்­துப்­போ­னார். திரு அகி­லேஸ்­வ­ர­னின் நற்­செ­ய­லுக்­காக உல­கக் குடி­ம­கன் விருது அவ­ருக்கு வழங்­கப்­பட்­டது.

விருது வழங்­கும் விழா­வில் உரை நிகழ்த்­திய, அற­நி­று­வ­னத்­தின் புர­வ­ல­ரு­மான அதி­பர் ஹலிமா, கொள்­ளை­நோய் காலத்­தி­லும் மனி­தர்­க­ளுக்­கி­டை­யி­லான உறவை வளர்ப்­ப­தி­லும் அனைத்­து­லக ஒத்­து­ழைப்­பைப் பேணு­வ­தி­லும் அற­நி­று­வ­னம் சிறப்­பு­றப் பணி­யாற்­றி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

"உலக நில­வர சவால்­கள் ஒரு­பு­றம் இருந்­த­

போ­தி­லும் சிறந்த செயல்­க­ளுக்­காக உலக சமூ­கங்­க­ளு­டன் சிங்­கப்­பூ­ரர்­களை ஒன்­றி­ணைக்கும் தமது நோக்­கத்­தில் அற­நி­று­வ­னம் உறு­தி­யாக இருந்து பணி­யாற்றி உள்­ளது," என்­றார் அதி­பர்.

நிகழ்ச்­சி­யில் திரு­வாட்டி கண்­ண­கி­தேவி நாரா­ய­ண­சாமி, 59, திரு டேவிட் போங், 31, போன்ற அற­நி­று­வ­னத் தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு குடி­ம­கன் தூதர் விருது வழங்­கப்­பட்­டது. உல­கச் சமூ­கங்­க­ளு­டன் தங்­க­ளது நிபு­ணத்­து­வத்­தை­யும் வளங்­க­ளை­யும் பகிர்ந்து­கொள்­ளும் சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கௌர­விக்­கும் வகை­யில் இந்த விருது வழங்­கப்­ப­டு­கிறது.