மீட்சிப் பாதைக்குத் திரும்பும் நிறுவனங்கள்

1 mins read
614d4b3d-a088-4ffe-9e18-f1f15b81a8dc
-

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் நிறு­வ­னங்­கள், கொவிட்-19 கார­ண­மாக ஏறத்­தாழ இரண்­டாண்டு காலம் பாதிக்­கப்­பட்­டு­விட்­டன.

அந்­த பாதிப்­பில் இருந்து மீண்டு வரும் நிலைக்கு அவை திரும்பி இருக்­கின்­றன.

இந்த நில­வ­ரம் புதன்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட ஆய்வு ஒன்­றின் மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

இருந்­தா­லும்கூட, கொவிட்-19 பாதிப்பு­களில் இருந்து முற்­றி­லும் மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு வர மேலும் ஓராண்டு முதல் இரண்­டாண்­டு­கள் ஆகும் என்று நிறு­வனங்­கள் எதிர்­பார்க்­கின்­றன.

சிங்­கப்­பூர் தொழில்­துறைக் கூட்­ட­மைப்பு நடத்­திய ஆய்வு ஒன்றின் மூலம் இந்த நில­வ­ரங்­கள் தெரி­ய­வந்­துள்­ளன.

அந்த ஆய்வு, இந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதிக்­கும் அக்­டோ­பர் 1ஆம் தேதிக்­கும் இடை­யில் நடத்­தப்­பட்­டது.

முக்­கி­ய­மான துறை­க­ளைச் சேர்ந்த 1,096 நிறு­வ­னங்­கள் ஆய்­வில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன. அவற்­றில் 80 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள். மற்றவை பெரிய நிறு­வ­னங்­கள்.