கொவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்குப் முந்திய சூழலுடன் ஒப்பிடுகையில், சாங்கி விமான நிலையம்வழி வரும் விமானங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஃபிளைட்அவேர் நிறுவனம் இதைத் தெரிவித்துள்ளது.
நேற்று பதிவான தகவலின்படி ஏழு நாள்களுக்கு சராசரியாக 359 விமானங்கள் சாங்கி விமான நிலையம்வழியே சென்றுள்ளன.
2019ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையில் இது சுமார் மூன்றில் ஒரு பங்கு. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியன்றுதான் உலகின் முதல் கொவிட்-19 பாதிப்பு சீனாவில் பதிவானது.
எனினும், சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் சாங்கி விமான நிலையத்திற்கு வந்துசென்ற விமானங்களின் எண்ணிக்கை 67.7 விழுக்காடு அதிகரித்தது.
இப்புள்ளிவிவரங்கள், பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள் ஆகிய இருவகை விமானங்களின் எண்ணிக்கையையும் உள்ளடக்கியது.