தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிசம்பர் 17 அன்று வழக்கநிலைத் தேர்வு முடிவுகள்

1 mins read
86d0e3bb-c6ba-4f80-bdf4-ab392dfae724
-

பொதுக் கல்­விச் சான்­றி­தழ் வழக்­க­நி­லைத் தேர்வு (ஜிசிஇ 'என்' நிலை) முடி­வு­கள் வரும் 17ஆம் தேதி­யன்று வெளி­யி­டப்­படும். கொவிட்-19 சூழல் கார­ண­மாக தேர்வு முடி­வு­களை மாண­வர்­கள் பள்­ளி­யிலோ இணை­யத்­திலோ பெற வசதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இது குறித்து கல்வி அமைச்சு, சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­கம் ஆகி­யவை நேற்று அறி­வித்­தன.

தேர்வு முடி­வு­க­ளைப் பெறும் மாண­வர்­கள் மட்­டுமே பள்­ளிக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். அத்­துடன் அவர்­கள் பாது­காப்பு நடை­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும் என்று அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சில மாண­வர்­க­ளுக்கு கொவிட்-19 தொடர்­பில் சுகா­தார அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­க­லாம். இவர்­கள் டிசம்­பர் 17ஆம் தேதி­யன்று தேர்வு முடி­வு­களை நேர­டி­யாக வந்து பெற்­றுக்­கொள்ள, முத­லில் ஆண்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொண்டு தங்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­திட வேண்­டும்.

உடல் நல­மில்­லாத அல்­லது கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட மாண­வர்­கள், பள்­ளிக்கு வர­வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.

அதற்­குப் பதி­லாக அவர்­கள் தங்­க­ளின் தேர்வு முடி­வு­களை இணை­யம் வழி­யாக பிற்­ப­கல் 3.15 மணி முதல் அறிந்­தி­ட­லாம்.

மாண­வர்­கள் தங்­கள் சார்­பாக ஒரு­வரை நிய­மித்­தும் தேர்வு முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

'என்' நிலைத் தேர்வு முடி­வு­கள் வெளி­வந்த பிறகு, தங்­க­ளின் பள்ளி­யில் உள்ள ஆசி­ரி­யர்­கள், கல்வி மற்­றும் வாழ்க்­கைத்­தொழில் வழி­காட்­டும் ஆலோ­ச­கர்­கள் ஆகி­யோரை மாண­வர்­கள் அணுகி ஆலோ­சனை பெற­லாம்.

'மைஸ்­கில்ஸ்­ஃபி­யூச்­சர்' இணை­யத்­த­ளத்­தில் தங்­க­ளுக்கு ஏற்ற கல்வி, வேலைப் பாதை­க­ளை­யும் அவர்­கள் அறிந்­து­கொள்­ள­லாம்.