தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதலியின் மனவளர்ச்சி குன்றிய குழந்தையை துன்புறுத்திய ஆடவருக்குச் சிறை

2 mins read
5b569319-bb81-4b90-8656-df04417cb627
-

மன­வ­ளர்ச்சி குன்­றிய மூன்று வயது பெண் குழந்­தை­யைத் துன்­பு­றுத்­திய குற்­றத்­திற்­காக ஆட­வர் ஒரு­வ­ருக்கு நேற்று பத்து மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தம் மீது சுமத்­தப்­பட்ட குழந்­தைக் கொடு­மைக் குற்­றச்­சாட்டை அவர் அக்­டோ­பர் 25ஆம் தேதி ஒப்­புக்­கொண்­டார்.

குழந்­தை­யின் அடை­யா­ளத்­தைக் காக்­கும் பொருட்டு அந்த 25 வயது குற்­ற­வா­ளி­யைப் பற்­றிய விவ­ரங்­களை நீதி­மன்­றம் வெளி­யி­ட­வில்லை. இருப்­பி­னும் உணவு விநி யோகிப்­பா­ள­ராக அவர் வேலை செய்து வந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்டது.

தற்­போது 23 வய­தா­கும் பெண்­ணு­டன் 2019 பிப்­ர­வரி முதல் ஆட­வர் வாழத் தொடங்­கியதாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தப் பெண்­ணின் குழந்தை மன­வ­ளர்ச்சி குன்­றி­ய­வர் என்­பது அப்­போதே அந்த ஆட­வ­ருக்­குத் தெரி­யும்.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி 22ஆம் தேதி பிர­ச­வத்­திற்­காக ஆம்­பு­லன்­ஸில் காதலி அனுப்பி வைக்­கப்­பட்­டார். குழந்­தையை அவ­ரது பாட்டி வீட்­டில் விட்­டுச்­செல்ல முடி­வெ­டுத்த ஆட­வர், தமது காதலி குழந்தை பெற­வி­ருப்­பதை தம்­மால் காண இய­ல­வில்லை என்ற மன­உ­ளைச்­ச­லில் இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த நேரத்­தில் குழந்தை அழு­த­தால் அவ­ரது எரிச்­சல் அதி­க­மா­ன­தாக அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் கோலி இங் தெரி­வித்­தார்.

அத­னால் ஆத்­தி­ரத்­தில் குழந்­தை­யின் வலது கன்­னத்­தில் ஆட­வர் மூன்­று­முறை குத்­தி­ய­தா­க­வும் முகத்­தில் அறைந்­த­தா­க­வும் அதன் பின்­னர் குழந்தை அழு­கையை நிறுத்­தி­ய­தா­க­வும் வழக்­க­றி­ஞர் கூறி­னார். காலை 6 மணியளவில் பாட்டி வீட்டில் அதனை விட்ட பின்னர் காதலியைக் காண அவர் மருத்துவ மனைக்குச் சென்றார்.

குழந்­தை­யின் காயங்­க­ளைப் பார்த்த அவ­ரது 43 வயது பாட்டி காவல்­து­றை­யி­டம் புகார் செய்­தார்.

பின்னர், கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்­குக் குழந்தை கொண்டு செல்­லப்­பட்­டது.

அதன் பிறகு ஆட­வர் அவ­ரது காதலி ஆகி­யோ­ரின் பரா­ம­ரிப்­பில் இருந்து குழந்தை விடு­விக்­கப்­பட்ட தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப் பட்­டது.