995

995

3 mins read
ffe9266a-4853-4e4e-82b7-7d66891b6a68
அவ­ச­ர­கால மருத்­துவ தொழில்­நுட்­பர்­க­ளாக(EMT) மாற்­றுப் பயிற்சி பெற்ற சிங்கப்பூர் குடி­மைத் தற்­காப்பு படை­யி­னர் மருத்­துவ அவ­சர நிலை உங்களது உதவிக்கு வரக்கூடும். படம்: உள்துறை அமைச்சு -
multi-img1 of 2

எப்போது

அழைப்பது

மருத்துவ அவசர நிலை என்னவென்றும், எவை அவசர நிலை இல்லையென்றும் தெரிந்துகொள்வது ஒருவரது உயிரைக் காக்கும்

உயிரை அச்­சு­றுத்­தும் அவ­சர சூழ­லில் நீங்­கள் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்பு படையை எப்­போ­தும் நம்­ப­லாம். அது இயக்கி வரும் 24 மணி நேர அவசர மருத்துவ சேவைகளின்(EMS) மூலம் உங்கள் உதவிக்கு வர எப்போதும் ஒரு குழு தயாராக இருக்கிறது.

995 எண்ணை அழை­யுங்­கள்.

ஆனால் கடந்த ஆண்டு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் அவ­ச­ர­கால மருத்­துவ சிகிச்­சைப் பிரிவு கையாண்ட 190,000க்கும் மேற்­பட்ட அழைப்­பு­களில், 8% அதா­வது தின­சரி

48 தொலை­பேசி அழைப்­பு­கள் அவ­சர தேவை இல்­லா­மல் அல்­லது அபாய சூழல் என தவ­றாக அடை­யா­ளம் காணப்பட்டன.

இது­போன்ற சூழ்­நி­லை­களில் உயி­ருக்­குப் போரா­டும் நிலை­யில் இருக்­கும் வேறொ­ரு­வ­ருக்கு வழங்­க­வேண்­டிய சேவை­யில் தாம­தத்தை இந்த அவ­ச­ர­மில்லா அழைப்­பு­கள் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டும்.

இருப்­பி­னும் மொத்த எண்­ணிக்­கை­யில் பார்க்­கும்­போது நிலைமை சற்று மேம்­பட்டு உள்­ளது. 20 ஆண்­டு­களில் முதன் முறை­யாக அழைப்­பு­கள் குறைந்­துள்­ளன.

அவ­ச­ர­மில்லா அழைப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யும் அபாய சூழல் என தவ­றாக அடை­யா­ளம் காணப்­ப­டு­கின்ற அழைப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யும் 16.1% மற்­றும் 14.1% குறைந்­துள்­ளன.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்பு படை­யின் மருத்­துவ சேவை­கள் எவ்­வாறு அவ­சர நிலை சம்­ப­வங்­களை நிர்­ண­யிக்­கிறது?

ஒருவர் உதவிக்காக, 995 என் மூலம் தொடர்புகொண்டவுடனே, தொலைபேசி வாயிலாக நோயாளியின் முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தொடர்பு மைய ஊழியர்கள், அழைப்பவர் கொடுக்கும் தகவல்களைக் கொண்டு நோயாளியின் நிலைமையின் அவசரத்தை தரம் பிரித்த பிறகு அதற்­கேற்ப முன்னுரிமை வழங்கி வளங்களை ஒதுக்குவர்.

ஒவ்வொரு அழைப்பும் உடனடியாக முதற்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை 2017ஆம் ஆண்­டில் அவ­சர மருத்­துவ சேவை­கள் வழங்­கு­வ­தற்க்­கான கட்­ட­மைப்பை அறிமுகப்படுத்தியது. இக்­கட்­ட­மைப்­பில், 4 பிரி­வு­கள் உள்­ளன: உயிரை அச்­சு­றுத்­தும் அவ­ச­ர­நிலை, அவ­ச­ர­நிலை, அவசரம் குன்றிய நிலை, மற்­றும் அவ­ச­ர­மில்லா சம்­ப­வங்­கள்.

மார­டைப்பு, சுய­நி­னை­வற்ற நிலை, மூச்­சுத்­தி­ண­றல், வலிப்பு, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் காயங்கள், பக்­க­வா­தம் ­முதலியவை உயிரை அச்சுறுத்தும் அவசரநிலையின் கீழ் அடங்கும். இது­போன்ற சம்­ப­வம் ஏற்­பட்­டால் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூடு­த­லான அவ­ச­ர­நிலை வளங்­களை சம்­பவ இடத்­திற்கு உடனடியாக அனுப்பும்.

அவ­ச­ர­நிலை என்­பவை மோச­மான ஒவ்­வாமை, அவ­ச­ர­நிலை பிர­ச­வம், தலைக் காயம், எலும்பு முறிவு, ஆஸ்­துமா, நீடித்த உடல்­ந­லக் குறை­வால் பாதிக்­கப்­பட்­டுள்ள மூத்­தோர், உடல் நலமில்லாத சிறுவர்கள் முத­லி­ய­வற்றைக் கொண்டது.

அவசரம் குன்றிய நிலை என்­பவை வெட்­டுக் காயத்­தால் ஏற்­படும் ரத்­தக் கசிவு, விபத்­தில் ஏற்­பட்ட தோல் காயம், வீக்­கம், லேசான காயம், விடாப்­பி­டி­யான காய்ச்­சல் முத­லி­ய­வற்றைக் கொண்டது.இது­போன்ற சம்­ப­வங்­கள் ஏற்­பட்­டால் சற்று மெது­வா­க­வும் குறை­வான முன்­னு­ரி­மை­யி­லும் படை­யி­னர் சம்­பவ இடத்­திற்­குச் செல்­வர்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­த­னது தீய­ணைப்பு மீட்பு அதி­கா­ரி­களை (FRS) முதல் மூன்று நிலைபிரிவுகளுல் அடங்கிய சம்பவங்களுக்கு அனுப்பும். 2012ஆம் ஆண்டு முதல் 300க்கும் மேற்­பட்ட குடி­மைத் தற்­காப்பு படை­யி­னர் அவ­ச­ர­கால மருத்­துவ தொழில்­நுட்­பர்­க­ளாக(EMT) மாற்­றுப் பயிற்சி பெற்று வந்­துள்­ள­னர். அவர்­கள் தீய­ணைப்பு மற்­றும் மருத்­துவ அவ­சர நிலை சம்­ப­வங்­க­ளைக் கையாளக்கூடியவர்கள்.

இந்த அதி­கா­ரி­கள் (FRS-EMT) உயிரை அச்­சு­றுத்­தும் அவ­ச­ர­நிலை சம்­ப­வங்­க­ளின்­போது தீய­ணைப்பு வாக­னங்­களில் 'ரெட் ரைனோ' எனும் விரைவு தீய­ணைப்பு வாக­னங்­களிலோ அல்­லது தீயணைப்பு மோட்டார் சைக்கிள்களிலோ சம்­பவ இடத்­துக்­குச் செல்­ல­லாம். தீய­ணைப்பு மோட்­டார்­சைக்­கிள்­களில் அத்தியாவசியமான மருத்துவ பொருட்களான மருந்­து­கள், ஆக்­சி­ஜன் சிலிண்­டர்­கள், இத­யத்­து­டிப்­பைச் சீர்­செய்­யும் கைய­டக்­கக் கருவி(AED), உணர்­க­ரு­வி­கள் போன்றவை வைத்திருக்கப்படும். தீய­ணைப்பு மோட்­டார்­சைக்­கிள் கச்­சி­த­மாக இருப்­ப­தால், அவ­சர மருத்­துவ வாக­னத்­தை­விட சம்­பவ இடத்தை விரைந்­த­டை­யும்.

மலச்­சிக்­கல் மற்­றும் தோல் சரங்கு போன்ற அவ­ச­ர­மில்லா சம்­ப­வங்­க­ளுக்கு அவ­சர நிலை மருத்­துவ உதவி தேவைப்­ப­டாது. 2019ஆம் ஆண்டு முதல் அவ­ச­ர­மில்லா சம்­ப­வங்­க­ளாக அடை­யா­ளம் காணப்­ப­டு­வோரை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­வதை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்பு படை நிறுத்­தி­யுள்­ளது. அவர்­கள் சுய மருத்­துவ உதவி செய்­து­கொள்­ளவோ அல்­லது ஏதே­னும் ஒரு மருந்­த­கத்­தில் சிகிச்­சைப் பெற்­றுக்­கொள்­ளவோ அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர். மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட விரும்­பு­வோர், 1777 எனும் எண்­ணில் அவ­ச­ர­மில்லா

ஆம்­பு­லன்ஸ் சேவையை ஒரு கட்டணத்தை செலுத்தி, நாட அறிவுறுத்தப்படுவர்.

மேல் விவரங்களுக்கு இந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது https://www.scdf.gov.sg/home/about-us/information-on-ems/scdf-emergency-medical-services இணையத்தளத்தை நாடலாம்.