என்டியுசி ஃபேர்பிரைசின் 'பாடப்புத்தகத்தைப் பகிர்வோம்' என்ற வருடாந்திர செயல்திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு 895,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி சியா கியான் பெங் தெரிவித்து உள்ளார்.
இந்தத் திட்டம் 1983ல் தொடங்கப்பட்டது. அது முதல் இந்த ஆண்டு சாதனை அளவுக்கு புத்தகங்கள் திரட்டப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
உணவு புத்தாக்கத் தொழில்நுட்பக் கணினி மென்பொருள் உருவாக்க நிகழ்ச்சி ஒன்றையும் நேற்று முதன்முதலாக ஃபேர் பிரைஸ் நடத்தியது.

