சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாட்டில் தேவைப்படுவோருக்கு உதவுவதற்காக 'சிரமத்தில் உள்ள பெண்களுக்கு' என்ற ஒருமாத கால நிதி திரட்டு இயக்கம் தொடங்கி உள்ளது.
அதன்மூலம் நாடு முழுவதையும் சேர்ந்த பெண்களை ஈடுபடுத்தி இந்த மாத முடிவில் $20,000 திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் செஞ்சிலுவைச் சங்க இணையப் பக்கத்தில் சொந்தமாக நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்கலாம்.
redcross.sg/womeninred-donate என்ற இணையத்தளம் வழி மக்கள் நிதி தரலாம்.

