சிங்கப்பூர் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை சன்னல் பகுதிகள் கீழே விழுந்த 43 சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்தச் சம்பவங்களில் யாரும் காயம் அடையவில்லை.
அவற்றில் பாதி சன்னல்கள் மூடி திறக்கும் கதவுகளைக் கொண்டவை. 16 சன்னல்கள் தள்ளித் திறந்து மூடும் கதவுகளைக் கொண்டவை. மற்றவை இதர வகை சன்னல்கள் என்று கட்டட, கட்டுமான ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நேற்று தெரிவித்தன.
இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலத்தில் 49 ஆக இருந்தது.
திறந்து மூடும் சன்னல்களில் போடப்பட்டு இருந்த அலுமினியம் திருகாணிகள் துருப்பிடித்துவிட் டதே கதவுகள் கழன்றுவிழ முக்கிய காரணம். இந்த ஆணிகளை அகற்றிவிட்டு பதிலாக துருப் பிடிக்காத எஃகு ஆணிகளைப் பொருத்த வேண்டும் என்று இந்த ஆணையம் 2004 முதல் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தள்ளு கதவுகளைக் கொண்ட சன்னல்களில் தாங்கும் சட்டங்களின் பிடிமான பாதுகாப்புச் சாதனங்கள் சரியில்லாமல் போனதால் அதைவிட்டு கதவுகள் வெளியே கழன்று வந்து கீழே விழுந்துவிட்டன. பழுதாகிவிட்ட சன்னல் பகுதி களைச் சோதித்து அவற்றை மாற்றும்படி இந்த அமைப்புகள் வீட்டு உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூறின.

