வாசகர்களின் பிரபலத் தெரிவுகள் விருதுகளின் பெரியவர்களுக்கான ஆங்கில நூல்கள் பிரிவில் சிங்கப்பூரின் முன்னாள் அரசியல் தலைவர்கள் புனைந்த நூல்கள் உயரிய விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளன.
அரசியல் தலைவர்களின் நேரடி அனுபவங்கள், பொதுமக்கள் முன் நிகழாதவை போன்ற அம்சங்கள் அந்த நூல்களில் இடம்பெறு
கின்றன. பெரியவர்களுக்கான ஆங்கில நூல்கள் பிரிவில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் பற்றிய நூல் முதல் பரிசை வென்றது.
ஸ்டேன்டிங் டால்: தி கோ சோக் டோங் யெர்ஸ் எனும் அந்த நூலைக் கதாசிரியரும் முன்னாள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி
யாளருமான பே ஷின் ஹுவேயும் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் எழுதினர்.
முன்னாள் துணைப் பிரதமர் பேராசிரியர் எஸ். ஜயகுமார் பற்றிய நூல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கவர்னிங்: எ சிங்கப்பூர் பெர்ஸ்பெக்டிவ் எனும் தலைப்பு கொண்ட அந்த நூலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் பிரசுரித்தது.
மெய்நிகர் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற நூல்கள் அறிவிக்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் பேராசிரியர் ஜயகுமாரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றபோதிலும் விருது வழங்கப்பட்டதற்தாக அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
விருது வென்ற நூல்கள்.
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்

