சிங்கப்பூரில் டிசம்பர் 5ஆம் தேதி வாக்கில் 97 விழுக்காட்டு ஊழியர்கள் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னமும் 75,000 ஊழியர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்து உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
அக்டோபர் 17ஆம் தேதி நிலவரப்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் 113,000. இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அளவுக்குக் குறைந்து இருக்கிறது. அலுவலகத்திற்குத் திரும்பவேண்டும் என்றால் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற விதி ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வருகிறது.
இவ்வேளையில், வேலை இடத்தைத் திறந்துவிட பல நிறுவனங்களும் ஆயத்தமாக இருக்கின்றன என்றாலும் ஓமிக்ரான் தலை எடுப்பது, ஊழியர்களின் நல்வாழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விவேகமான முறையில் செயல்பட வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


