மனநிலை காரணமாக ரயீசா பொய் சொல்லி இருக்கலாம்

மனநிலை காரணமாக ரயீசா பொய் சொல்லி இருக்கலாம்

2 mins read
e8a56703-02b6-425f-9a93-fc6ccc872e2f
-

வாட்ஸ்அப் செய்தி தொடர்பில் பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் சாட்சியம்

நாடா­ளு­மன்­றத்­தில் சொன்ன பொய் சொன்­னது சொன்­ன­ப­டியே இருக்­கட்­டும் என்று கட்­சித் தலை­வர்­கள் தன்­னி­டம் கூறி­ய­தாக வாட்ஸ்­அப் செய்­தி­யில் திரு­வாட்டி ரயீசா கான் பொய் சொல்லி இருந்­தார் என்­றும் இதற்கு அவ­ரி­டம் காணப்­பட்ட 'என்ன பேசு­கி­றோம் என்­ப­தைப் புரி­யா­மல் பேசும் ஒரு குறை­பாடு' கார­ண­மாக இருக்­க­லாம் என்­றும் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­மைச் செய­லா­ளர் பிரித்­தம் சிங் வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு முன்­னி­லை­யில் சாட்­சி­யம் அளித்த அவர், நவம்­பர் 29ஆம் தேதி திரு­வாட்டி கான் பாட்­டா­ளிக் கட்­சி­யின் ஒழுங்கு நட­வ­டிக்கை குழு­வி­டம் தனது மன­நி­லை பற்றி கூறி­ய­தாகவும் குறிப்­பிட்­டார்.

"அதை முதன்­மு­த­லாக அப்­போது­தான் நான் கேட்­டேன். என்ன குறை­பாடு என்று நான் கேட்­ட­தற்கு, சிந்­த­னை­யில்­லா­மல் நான் பேசி­விடு­கி­றேன் என்று திரு­வாட்டி கான் பதில் கூறி­னார்.

"நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் என்ற முறை­யில் அப்­படி பேசு­வது ஆபத்­தா­னது அல்­லவா என்று நான் கேட்­ட­தற்கு ஆமாம் என்று திரு­வாட்டி கான் பதி­ல­ளித்­தார்," என்று திரு பிரித்­தம் சிங் நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு­வி­டம் அளித்த சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­டார்.

திரு­வாட்டி கானின் மன­நிலையை மதிப்­பி­டு­வ­தற்கு அல்­லது அவ­ரு­டைய மன­நி­லை பற்­றிய அறிக்­கை­யைத் தாக்­கல் செய்­யும்­படி உரி­மைக் குழு உத்­த­ர­விட்­டால், அது அநே­க­மாக பயன்தரக்­கூ­டும் என்­றும் திரு பிரித்­தம் சிங் தன் சாட்­சி­யத்­தில் கூறி­னார்.

உரி­மைக் குழு­வின் விசாரணை டிசம்­பர் 10ஆம் தேதி நடந்­தது. அதற்­குப் பிற­கு­தான் உரி­மைக் குழு தனது மூன்­றா­வது சிறப்பு அறிக் கையை நேற்று வெளி­யிட்­டது.

டிசம்­பர் 10ஆம் தேதி நடந்த விசா­ர­ணை­யின்­போது கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங், திரு பிரித்­தம் சிங்­கி­டம் ஒரு கேள்வி கேட்­டார்.

திரு­வாட்டி கான் தன்­னு­டைய உத­வி­யா­ளர்­கள் இரண்டு பேருக்கு அனுப்­பிய வாட்ஸ்­அப் செய்­தி­யில் பொய் சொன்­ன­தற்­கான கார­ணங்­கள் என்­ன­வாக இருக்­கும் என்­பதைத் தெரி­விக்­கும்­படி திரு பிரித்தம் சிங்­கி­டம் திரு எட்­வின் டோங் கேட்­டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் திரு­வாட்டி கான் சொன்ன பொய், சொன்­னது சொன்­ன­ப­டியே இருக்­கட்­டும் என்று திரு பிரித்­தம் சிங், பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­வ­ரான சில்­வியா லிம், துணைத் தலை­வ­ரான ஃபைசல் மானாப் ஆகிய மூவ­ரும் தன்­னி­டம் கூறி­ய­தாக அந்த வாட்ஸ்­அப் செய்­தி­யில் திரு­வாட்டி கான் குறிப்­பிட்டு இருந்­தார்.

இது பற்றி திரு எட்­வின் டோங் கேட்­ட­போது, அதற்குத் திரு­வாட்டி கானின் சம்பந்தமில்லாமல் பேசும் ஒரு குறை­பாடு காரணமாக இருக்­கக்­கூ­டும் என்று திரு பிரித்­தம் சிங் கூறி­னார்.