பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பொய் சொன்னார்.
அதனை அடுத்து திருவாட்டி கான் அவராக விலகவில்லை எனில் அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக கட்சியின் மத்திய செயற்குழு வாக்களித்தது.
மன்றத்தில் திருவாட்டி கான் சொன்ன பொய் தொடர்பான முழு நிலவரங்களும் தெரியாத நிலையில் இந்த முடிவை மத்திய செயற்குழு எடுத்தது என்று நாடாளுமன்ற உரிமைக் குழு சனிக்கிழமை வெளியிட்ட இரண்டாவது சிறப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளரும் நாடாளுமன்ற எதர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங், கட்சித் தலைவி சில்வியா லிம், துணைத் தலைவர் ஃபைசல் மானாப் ஆகியோரிடம் நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தான் பொய் சொன்னதாக, ஆகஸ்ட் 8ஆம் தேதி திருவாட்டி கான் கூறி இருந்ததும் அதில் உள்ளடங்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் திருவாட்டி கான் சொன்ன பொய்யை அப்படியே தொடரும்படி அவரை தானும் பாட்டாளிக் கட்சியின் இதர தலைவர்களும் ஒருபோதும் கேட்டுக்கொண்டது கிடையாது என்று கட்சியின் துணைத் தலைவர் ஃபைசல் மானாப் நாடாளுமன்றக் குழு விடம் சாட்சியம் அளித்தார்.
தான் பொய் சொல்லி இருப்பதாக திருவாட்டி கான் தங்களிடம் கூறியபோது அதன் தொடர்பில் தாங்கள் செயல்படாதது ஏன் என்பதைப் புரிந்துகொள்வது சிரம மானது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
இருந்தாலும் திருவாட்டி கானின் பாலியல் கொடுமை பற்றி கேட்டதும் தாங்கள் திகைத்துப் போய்விட்டதாகவும் அவரின் நல்வாழ்வே தங்கள் அக்கறையாக இருந்தது என்றும் துணைத் தலைவர் ஃபைசல் மானாப் வியாழக் கிழமை அளித்த சாட்சியத்தில் கூறினார். இந்த விவரங்களை இரண்டாவது சிறப்பு அறிக்கை தெரிவித்தது.

