குடிமக்கள் குடும்பங்களுக்கு $100 பற்றுச்சீட்டு விநியோகம்

குடிமக்கள் குடும்பங்களுக்கு $100 பற்றுச்சீட்டு விநியோகம்

2 mins read
17021757-5fac-4a8c-b2d4-0d32e1db9286
ஆயிஷா ரெஸ்டாரண்ட் என்ற உணவு நிலையத்தில் உள்ள சரப்பான் & நாசி படாங் கடையில் பிரதமர் லீ சியன் லூங், ஜயினுலாவுதீன் அப்துல் மாலிக், முஜிபூர் ரஹ்மான், ஜூரோங் குழுத்தொகுதி அடித்தள அமைப்பு ஆலோசகர் ஷான் ஹுவாங், மேயர் லோ யென் லின் ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2022 டிசம்பர் 31 வரை உணவங்காடி நிலையங்களில், கடைகளில் பயன்படுத்தலாம்

சிங்­கப்­பூ­ரில் அனைத்து குடி­மக்­கள் குடும்­பங்­களும் இப்­போது $100 மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். அதை ஏறத்­தாழ 10,000 உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் இதர கடை­க­ளி­லும் செல­வி­ட­லாம்.

'சமூக மேம்­பாட்டு மன்­றப் பற்றுச்­சீட்டு' என்று குறிப்­பி­டப்­படும் அவற்­றின் மொத்த மதிப்பு $130 மில்­லி­யன். அந்­தச் சீட்­டு­களை மொத்தம் 1.3 மில்­லி­யன் குடும்­பங்­கள் பெறும்.

பற்­றுச்­சீட்­டு­கள் நேற்று முதல் மின்­னி­லக்க வழி­களில் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. 2022 டிசம்­பர் 31 வரை அவற்­றைச் செல­வி­ட­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு குடும்­பத்­திற்கு ஒரு சிங்­கப்­பூ­ர­ருக்­குப் பற்­றுச்­சீட்டு கொடுக்­கப்­படும். சிங்­பாஸ் ஏற்­பாட்­டின் மூலம் இணை­யத்­தில் தொடர்­பு­கொண்­டால் பதி­வு­பெற்ற கைபேசி எண்­ணுக்­குத் தொடர்பு முக­வரி அனுப்பி வைக்­கப்­படும். அதன் மூலம் பற்­றுச்­சீட்­டைப் பெற­மு­டி­யும்.

பற்­றுச்­சீட்­டு­கள் $2, $5, $10 வடி­வில் கிடைக்­கும். மின்­னி­லக்க ரீதி­யில் பற்­றுச்­சீட்­டைப் பெற முடி­யா­த­வர்­கள் சமூக நிலை­யங்­களை அல்லது மன்­றங்­களை அணுகி உதவி பெற­லாம்.

மின்­னி­லக்க ரீதி­யில் பற்­றுச்­சீட்டை அதற்­கான செய­லி­யில் கியூ­ஆர் குறி­யீடு மூலம் பயன்­ப­டுத்­த­லாம். பற்­றுச்­சீட்டை யாருக்­கும் விற்க முடி­யாது.

சமூக மேம்­பாட்டு மன்­றப் பற்றுச்­சீட்­டுத் திட்­டம் முதன்­மு­த­லாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்­கப்­பட்­டது. குறைந்த வரு­மா­னம் உள்ள 400,000 குடும்­பங்­கள் அதன் மூலம் பலன் அடைந்தன.

பிறகு இந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் இரண்­டா­வது முறை­யாக பற்­றுச்­சீட்டு கொடுக்­கப்­பட்­டது. இப்­போது மூன்­றா­வது முறை­யாக அது கொடுக்­கப்­ப­டு­கிறது.

இதற்­கான தொடக்க நிகழ்ச்சி நேற்று ஜூரோங் ஸ்பி­ரிங் சமூக மன்­றத்­தில் நடந்­தது. பிர­த­மர் லீ சியன் லூங் அதில் கலந்து­கொண்டு மூன்­றா­வது பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்.

ஐந்து மாவட்­டங்­க­ளின் மேயர்­களும் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்­து­கொண்­டார்­கள். கொவிட்-19 சூழ­லில் ஒவ்­வொ­ருவரும் வெளிப்­படுத்­திய ஒற்­றுமை உணர்வை அங்கீ­க­ரிக்­கும் வகை­யில் அர­சாங்­கம் இந்­தப் பற்­றுச்­சீட்­டு­களை வழங்­கு­வ­தாக பிர­த­மர் தெரி­வித்­தார்.

மக்­களும் இதில் பங்­கெ­டுத்­துக்­கொள்ளும் கடை­களும் எளி­தாக கையாளும் வகை­யில் பற்­றுச்­சீட்­டுத் திட்­டம் மின்­னி­லக்­க­ம­ய­மாகி உள்ள தாக மக்­கள் கழ­கத்­தின் தலை­வ­ரு­மான திரு லீ குறிப்­பிட்­டார்.

இந்­தப் பற்­றுச்­சீட்டு திட்­டத்தை வடி­வமைப்­ப­தில் அர­சாங்க அமைப்­பு­க­ளோ­டும் சமூகப் பங்­கா­ளி­க­ளோ­டும் சேர்ந்து சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் கடந்த சில மாதங்களாக செயல்­பட்­ட­தா­க­ பிரதமர் கூறினார்.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு எல்லா சமூக நிலை­யங்­க­ளி­லும் மன்­றங்­களி­லும் உதவி கிடைக்­கும் என்­றும் தெரி­வித்த திரு லீ, மூத்தோர் தலை­முறை அலு­வ­லக தூதர்­கள் வீடுவீடா­கச் சென்று முதி­யோ­ருக்­குப் பற்­றுச்­சீட்டு பற்றி விளக்­கு­வார்­கள் என்­றும் குறிப்பிட்டார்.

அடுத்த முறை இத்­த­கைய ஒரு திட்டத்தை அமல்­ப­டுத்­தும்­போது ஒவ்­வொரு­வருக்­கும் அது மிக­வும் எளி­மை­யா­க­வும் வச­தி­யா­க­வும் இருக்­கு­மாறு நாம் செய்­ய­லாம் என்றும் இப்­போது இந்த விநியோக நடைமுறை மூலம் கிடைக்­கும் அனு­ப­வம் அதற்கு உதவும் என்றும் திரு லீ குறிப்­பிட்­டார்.