சிறாருக்கு கொவிட்-19 பற்றி விளக்கி மீட்சிக்கு உதவும் பேராசிரியரின் புத்தகம்

சிறாருக்கு கொவிட்-19 பற்றி விளக்கி மீட்சிக்கு உதவும் பேராசிரியரின் புத்தகம்

2 mins read
751b8e0a-d0bd-4229-b112-78939455e9a9
கொவிட்-19 தொற்று காலம் சிறாருக்கு குழப்பமான காலம் என்கிறார் புத்தக ஆசிரியையான பேராசிரியர் லியோ யீ சின். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொற்று­நோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநரான பேரா­சி­ரியர் லியோ யீ சின், பாமர மக்­களும் புரிந்­து­கொள்­ளும் வகையில் எளிய சொற்­கள், வரை­ப­டங்­க­ளு­டன் நூற்­றுக்­க­ணக்­கான கட்டுரைகளை வெளி­யிட்டு இருக்­கி­றார்.

பழுத்த அனு­ப­வ­மிக்க ஆய்­வா­ளரும் அறி­வி­யல் அறி­ஞ­ரு­மான அவர் இப்­போது 'எனது கொரோனா கிருமி கதை' (My Coronavirus Story) என்ற ஒரு புத்­த­கத்­தைப் பாடல் வடி­வில் எழுதி இருக்­கி­றார்.

ஐந்து வயது உள்­ளிட்ட சிறார்­களும் இளை­ய­ரும் உரு­வாக்கி இருக்­கும் படங்­க­ளு­டன் அந்­தப் புத்­த­கம் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

சிறார் ஒரு­வ­ரின் பார்வை வழி தொற்றுக் கண்­ணோட்­டம் அதில் சித்­த­ரிக்­கப்­பட்டு இருக்­கிறது.

கொவிட்-19 பற்றி இளை­ஞர்­களுக்குப் பல­வற்­றை­யும் எடுத்­துக்­கூறி போதிப்­ப­தும் தொற்­றில் இருந்து மீண்­டு­வர ஊக்­கு­விப்­ப­தும் அந்­தப் புத்­த­கத்­தின் நோக்­கம்.

நான்கு முதல் 12 வய­து வரையுள்ள சிறார்­க­ளுக்­காக எழு­தப்­பட்டு உள்ள அந்­தப் புத்­த­கத்தை நேற்று உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கத்­தில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் வெளி­யிட்­டார்.

தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்தின் ஆத­ர­வு­டன் உரு­வாகி இருக்­கும் அந்­தப் புத்­த­கம், முன்களப் பணி­யா­ளர்­க­ளுக்­குப் புக­ழா­ரம் சூட்டி சிறப்­பிக்­கிறது.

நேற்­றைய நிகழ்ச்­சி­யில் பேரா­சி­ரியர் லியோ அமைச்­ச­ரு­டன் சேர்ந்து அந்­தப் புத்­த­கத்தை வாசித்தார்.

புத்­த­கம் பற்றி கருத்­து­ரைத்த பேரா­சி­ரியர் லியோ, தொடக்­கத்­தில் தான் தயங்­கி­ய­தா­க­வும் இருந்­தா­லும் கடந்த மார்ச்­சில் நடந்த ஒரு கண்­காட்­சி­யில் முன்­கள சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு பணி­யா­ளர்­க­ளைப் பாராட்டி சிறார்­கள் தாக்­கல் செய்து இருந்த ஓவி­யங்­கள் தம்மை கவர்ந்து புத்­த­கத்தை எழு­து­மாறு செய்­த­தா­க­வும் தெரி­வித்­தார்.

ஐந்து முதல் 11 வரை வய­துள்ள சிறார்­க­ளுக்கு ஃபைசர்-பயோ­என்­டெக்/கமிர்­னட்டி தடுப்­பூசி போடப்­படும் என்று அண்­மை­யில் செய்தி வெளி­யாகி இருக்­கிறது.

இந்­தப் புத்­த­கம் வெளி­யி­டப்­படும் காலநேரம் அதை­யொட்டியதாக இருக்கிறது என்றும் பேராசி­ரியர் லியோ குறிப்­பிட்­டார்.

ஏறத்­தாழ 1,000 பிர­தி­கள் அச்­சி­டப்­பட்டு இருக்­கின்­றன. அதைப் பொது­மக்­கள் தேசிய நூலக வாரியத்­தின் பொது நூல­கங்­களில் இருந்து இர­வ­லா­கப் பெற­லாம். தொடக்­கப்­பள்­ளி­களுக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்­கப்­படும்.

இத­னி­டையே, புதிய புத்­த­கம் பற்றி கருத்­து­ரைத்த அமைச்­சர் திரு ஓங், இந்­தத் தொற்றை வெற்றி ­க­ர­மான முறை­யில் கடந்து ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்தை நாம் பெற்றிருப்­போம் என்று நம் சிறார்­க­ளி­டம் நாம் கொண்­டி­ருக்­கும் நம்­பிக் கையை அந்­தப் புத்­த­கம் பிர­தி­நிதிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.