சிங்கப்பூருக்குப் பெருமை தேடித் தந்த அழகுச் சிலை நந்திதா பன்னா

2 mins read
83ae1430-646f-4bc9-bd84-3fea5de564ee
நந்திதா பன்னா.படம்: ஏஎஃப்பி -

மிஸ் யுனிவர்ஸ் எனும் பிர­பஞ்ச அழ­கிப் போட்­டி­யில் 34 ஆண்­டு­

க­ளுக்­குப் பிறகு சிங்­கப்­பூ­ரைப்

பிர­தி­நி­திக்­கும் அழகி முதல்­மு­றை­யாக அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்று முதல் 16 இடங்­க­ளைப் பிடித்த அழ­கி­களில் ஒரு­வ­ராக இருந்து சாதனை படைத்­துள்­ளார்.

இந்­தப் பெருமை சிங்­கப்­பூர்

அழ­கி­யான 21 வயது நந்­திதா

பன்­னா­வைச் சேரும்.

இவ­ருக்கு முன்பு 1987ஆம் ஆண்­டில் பிர­பஞ்ச அழ­கிப் போட்டி சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்­ற­போது சிங்­கப்­பூ­ரின் மரி­யன் நிக்­கோல் டியோ அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றார். அதற்­குப் பிறகு சிங்­கப்­பூர் அழ­கி­கள் யாரும் அரை­யி­று­திக்­குத் தகுதி பெற­வில்லை. இஸ்­‌ரே­லில் நேற்று காலை நடை­பெற்ற இவ்­வாண்­டின் பிர­பஞ்ச அழ­கிப் போட்­டி­யில் இதற்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளார் நந்­திதா.

"கடந்த மாதம் 8ஆம் தேதி­யன்று நந்­திதா தமது 21வது பிறந்­த­

நா­ளைக் கொண்­டா­டி­னார். எனவே போட்­டி­யின் அரை­யி­றுதி வரை சென்­றது இரட்­டிப்­புக் கொண்­டாட்­ட­மா­கும்.

"அவர் எப்­போ­தும் திறந்த மனப்­பான்­மை­யு­டன் இருப்­ப­வர். புதிய அனு­ப­வங்­க­ளைப் பெறு­வ­தில் மிகுந்த முனைப்­பு­டன் இருப்­பார்," என்று மிஸ் சிங்­கப்­பூர் யுனிவர்­ஸின் இயக்­கு­நர் திரு­வாட்டி வேலரி லிம் தெரி­வித்­தார்.

ராஃபிள்ஸ் பெண்­கள் உயர்­

நி­லைப்­பள்­ளி­யி­லும் ராஃபிள்ஸ்

கல்­விக் கழ­கத்­தி­லும் பயின்ற

நந்­திதா, தற்­போது சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வர்த்­தக நிர்­வா­கம், வர்த்­த­கப் பகுப்­பாய்­வுப் பட்­டக் கல்வி பயின்று வரு­கி­றார். 1.76 மீட்­டர் உய­ர­முள்ள நந்­திதா, 2017ஆம் ஆண்­டி­லி­ருந்து விளம்­பர அழ­கி­யாக இருந்து வரு­கி­றார். உள்­ளூர் அழ­கிப் போட்­டி­யில் வாகை சூடிய பிறகு நந்­திதா தமது நீண்ட கூந்­தலை வெட்டி புது தோற்­றத்­து­டன் பிர­பஞ்ச

அழ­கிப் போட்­டி­யில் கலந்­து­கொண்­டார். நீண்ட கூந்­தல் அவ­ரது முக அழகை மறைப்­ப­தாக மிஸ் யுனிவர்ஸ் சிங்­கப்­பூர் குழு­வி­னர் அனை­வ­ரும் ஏக­ம­ன­தாக முடி­வு­எடுத்­த­தாக திரு­வாட்டி லிம் கூறி­னார். கூந்­த­லின் நீளத்தை அவர் குறைத்­தால் அவ­ரது அழகை மெரு­கூட்­டும் என்று அனை­வ­ரும் கரு­தி­ய­தாக அவர் தெரி­வித்­தார். முத­லில் தயங்­கி­னா­லும், பிறகு புதிய தோற்­றத்­தைப் பயன்­ப­டுத்தி தமது அழகை வெளிக் கொண­ர­வும்

நம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­ட­வும்

நந்­திதா கற்­றுக்­கொண்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

"மிகுந்த ஆவ­லு­டன் இருக்­கி­றேன். எனது நீண்­ட­நாள் அய­ராத உழைப்பு என்னை அரை­யி­று­திச் சுற்­றுக்­குத் தகுதி பெறச் செய்து சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை சேர்க்க வேண்­டும் என வேண்­டிக்­கொள்­கி­றேன்," என்று போட்­டி­யின் நேரடி ஒளி­ப­ரப்­புக்கு முன்பு நந்­திதா தமது இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டார்.

போட்­டி­யின் தேசிய ஆடை

சுற்­றில் சிங்­கப்­பூர் கொடி­யின் நிறங்­க­ளான சிவப்பு, வெள்ளை ஆகியவற்றைக் கொண்ட ஆடை­யு­டன் நந்­திதா அழ­குச் சிலை­யாக வலம் வந்து பார்­வை­யா­ளர் அனை­

வ­ரை­யும் மெய்­ம­றக்­கச் செய்­தார்.

அந்த ஆடையை உள்­ளூர் ஆடை வடி­வ­மைப்­பா­ளர் ஃபிரே

டெ­ரிக் லீ வடி­வ­மைத்­தார்.

சிங்­கப்­பூ­ரின் முக்­கி­ய இடங்களும் முக்­கிய நிகழ்­வு­க­ளைக் காட்­டும் படங்­களும் அந்த ஆடை­யில் நெய்­யப்­பட்­டி­ருந்­தது குறிப்­

பி­டத்­தக்­கது. அத்துடன் விருது பெற்ற உள்ளூர் ஓவியரான லீ ஸின் லீயின் ஓவியங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.