நன்றி தெரிவிக்கும் வகையில் மலரும் நட்புறவுத் திட்டம்

நன்றி தெரிவிக்கும் வகையில் மலரும் நட்புறவுத் திட்டம்

2 mins read
ed29c509-ca35-4a6f-8799-9718acfd64a1
கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் கண்ணைப் பறிக்கும் அழகுடன் இருக்கும் கரையோரப் பூந்தோட்டத்தை சீனாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுடன் சேர்ந்து ரசித்த மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புதிய மல­ரும் நட்­பு­ற­வுத் திட்­டம் மூலம் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மாதத்­துக்கு ஒரு­முறை கரை­யோ­ரப் பூந்­தோட்டத்துக்குச் சென்று அதன் அழகை ரசிக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்க இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

அத்­து­டன், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் உள்­ளூர் தொண்­டூ­ழிய வழி­காட்­டி­க­ளுக்­கும் இடை­யி­லான இரு­வ­ழித் தொடர்பு மூலம் சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான நட்­பு­றவை வலுப்­பு­டுத்­து­வதே இத்­திட்­டத்­தின் இலக்கு.

அனைத்­து­லக வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தினத்தை முன்­னிட்டு இந்த மல­ரும் நட்­பு­ற­வுத் திட்­டம் நேற்று தொடங்­கி­வைக்­கப்­பட்­டது.

200க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கரை­யோ­ரப்

பூந்­தோட்­டத்தில் நேற்று சுற்­றுலா மேற்­கொண்­ட­னர்.

டச் இன்­டர்­நே­ஷ­னல், கரை­யோரப் பூந்­தோட்­டம் ஆகி­ய­வற்­றின் உத­வி­யோடு வெஸ்ட்­லைட் துவாஸ் அவென்யூ 2ல் தங்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சுற்­று­லா­வில் கலந்து கொண்டனர்.

அங்கு அவர்­கள் கிலௌட் ஃபாரஸ்ட், ஃபிளவர் டோம் போன்ற இடங்­க­ளைச் சுற்­றிப் பார்த்து மகிழ்ந்­த­னர்.

மல­ரும் நட்­பு­ற­வுத் திட்­டத்­துக்கு சிங்­கப்­பூர் ரட்­ச­ணிய சேனை­யும் டச் இன்­டர்­நே­ஷ­னல் அமைப்­பும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்­ளன. இத்­திட்­டத்­துக்கு வெஸ்ட்­லைட் தங்குவி­டுதி நிறு­வ­னத்­து­டன் இணைந்து கரை­யோ­ரப்

பூந்தோட்டம் ஆத­ரவு வழங்­கு­கிறது.

திட்­டத்­தின் துவக்க விழா­வில் வெளி­யு­றவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் கலந்துகொண்­டார்.

சீனா­வைச் சேர்ந்த சில ஊழி­யர்­க­ளு­டன் சேர்ந்து அவ­ரும் கரை­யோ­ரப் பூந்­தோட்­டத்தில் சுற்­றுலா மேற்­கொண்­டார்.

திட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கும் மனி­த­வள அமைச்சு, கார்ப்­ப­ரேட் எலா­யன்ஸ் ஃபார் குட் ஆகி­ய­வற்­றின் பிர­தி­நி­தி­களும் நேற்­றைய சுற்­று­லா­வில் கலந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று தலை­தூக்­கி­ய­தி­லி­ருந்து தங்­கு­வி­டு­தி­யி­லும் வேலை­யி­டத்­தி­லும் மட்­டுமே இருக்க பெரும்­பா­லான வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

சொந்த ஊருக்குத் திரும்பி தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்க்க முடியாத நிலை மட்டுமின்றி சிங்கப்பூரிலும் தங்கள் விருப்பம்போல நடமாட முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ந்து பணியாற்றி வரும் அவர்களது தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.