மருத்துவ விடுப்பில் வெளியே சென்ற பாதுகாவல் அதிகாரி

மருத்துவ விடுப்பில் வெளியே சென்ற பாதுகாவல் அதிகாரி

1 mins read
ba691154-8272-4bdc-adde-556e797608fe
ஆல்வின் லியோங் ஜித் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் பாது­ கா­வல் அதி­கா­ரி­யாக பணி­யாற்றும் ஆல்­வின் லியோங் ஜித் லூங், மருத்­துவ விடுப்­பில் இருந்­த­போது வெளியே சென்­ற­தால் அவருக்கு 24 நாள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் இரு­மல், காய்ச்­சல், உடல்­வலி, தொண்டை எரிச்­சல் ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்ட அவர் மருத்து­ வ­ரைப் பார்த்­தார். அவ­ருக்கு மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்டு கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து ­கொள்­ளும்­படி தெரி­விக்­கப்­பட்­டது. சோதனை முடிவு தெரி­யும் வரை வெளியே செல்­லா­மல் வீட்­டில் தங்­கு­மாறு அவ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் இரண்டு நாள்­களி லேயே அதை மீறி வெளியே சென்ற அவர் பாது­கா­வல் மேற்­பார்­வை­யா­ள­ருக்­கான வகுப்­பில் கலந்­து­கொண்­டார். சிங்­கப்­பூ­ர­ரான 46 வயது லியோங்­குக்கு பின்­னர் தொற்று இல்லை என்­பது தெரி­ய­வந்­தது. இருந்­தா­லும் கிரு­மிப் பர­வல் சூழ்­நி­லை­யில் அவர் வெளியே சென்­ற­தற்­காக நேற்று 24 நாள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.